ஒரு மேகம் மட்டும் தனித்து விடப்பட்டிருந்தது. அதைப் பார்க்க தீவு போல தோன்றிற்று. கைவிட்டு விட்ட திறளான மேகக்கூட்டம் தூர நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தனித்துவிடப்பட்ட மேகம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. சூரியன் மேகக்கூட்டத்திற்க்குள் ஒழிந்து கொண்டு, தன் கதிர்களால் கொரில்லா முறை தாக்குதலை என் மீது தொடுத்தான். சிமென்ட் அட்டை மேய்த இரயில் நிலைய பிளாட்பாமின் சிறு சிறு ஓட்டைகளின் வழியாக கொஞ்ச நேரத்திற்க்கு முன்னரே பெய்த மழைத்துளி என் கைகளை பதம் பார்த்தது. அன்னாந்து பார்த்தேன். பக்கத்தில் தண்ணீர் உட்காந்திருந்ததால் மேலும் நகர முடியாத நிலைமை. சூரியன் சுடும் போது முதல் முறையாக மழைத்துளியால் நனைந்தேன் மற்றவரெல்லாம் வேர்வையில் நனையும் போது. இரயில் நிலையம். மக்கள் கூட்டம் நிறைந்து, நின்றிருந்தனர், ஒரே ஒரு இரயில் மட்டும் கிளம்பியது. ஒருவர் மூன்று பெட்டிகளை தூக்கமுடியாமல் கஷ்டப்பட்டு ஊர்ந்துவந்தார். பொர்ட்டர் வெறும் கைகளை வீசிக்கொண்டு அவருடனே வந்தார். அந்த காட்சி என்னை ஆச்சரியப்படுத்திவிட்டது. இருவரும் என்னை நெருங்கி வந்தனர். சார் இதுக்கு மேல எவ்வளவு கமியா தருவ? என்ற கேள்வ
எழுதுதல் ஒருவகை அறிதல் முறை, அதனால் எழுதுகிறேன்.