Skip to main content

Posts

Showing posts from October, 2015

நான் யார்? பகுதி-2

 ஒரு மேகம் மட்டும் தனித்து விடப்பட்டிருந்தது. அதைப் பார்க்க தீவு போல தோன்றிற்று. கைவிட்டு விட்ட திறளான மேகக்கூட்டம் தூர நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தனித்துவிடப்பட்ட மேகம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. சூரியன் மேகக்கூட்டத்திற்க்குள் ஒழிந்து கொண்டு, தன் கதிர்களால் கொரில்லா முறை தாக்குதலை என் மீது தொடுத்தான். சிமென்ட் அட்டை மேய்த இரயில் நிலைய பிளாட்பாமின் சிறு சிறு ஓட்டைகளின் வழியாக கொஞ்ச நேரத்திற்க்கு முன்னரே பெய்த மழைத்துளி என் கைகளை பதம் பார்த்தது. அன்னாந்து பார்த்தேன். பக்கத்தில் தண்ணீர் உட்காந்திருந்ததால் மேலும் நகர முடியாத நிலைமை. சூரியன் சுடும் போது முதல் முறையாக மழைத்துளியால் நனைந்தேன் மற்றவரெல்லாம் வேர்வையில் நனையும் போது. இரயில் நிலையம். மக்கள் கூட்டம் நிறைந்து, நின்றிருந்தனர், ஒரே ஒரு இரயில் மட்டும் கிளம்பியது. ஒருவர் மூன்று பெட்டிகளை தூக்கமுடியாமல் கஷ்டப்பட்டு ஊர்ந்துவந்தார். பொர்ட்டர் வெறும் கைகளை வீசிக்கொண்டு அவருடனே வந்தார். அந்த காட்சி என்னை ஆச்சரியப்படுத்திவிட்டது. இருவரும் என்னை நெருங்கி வந்தனர். சார் இதுக்கு மேல எவ்வளவு கமியா தருவ? என்ற கேள்வ

நான் யார்? பகுதி - 1

என் எண்ணங்களை போலவே அந்த தென்ன மரக்கீற்றும் நிலவை தொட்டுவிட துடித்தது. திறந்து கிடக்கும் வானம், மாற்றுத் திறனாளி நிலவு, ஆசிர்வாதங்களை பொழியும் பனி, எந்த வேளையும் சாபம் பேறப்போகும் மேகம், தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் மரம், இருளில் வெளிச்சத்தை தேடிக் கொண்டிருக்கும் என் இரு விழி. மிகுந்த சாமார்த்தியசாளி தான் நிலவு. நாளை கச்சேரிக்கு இன்றே பயிற்சி செய்யும் கூண்டில் அடைபட்ட பறவை. தேனில் நனைந்த காற்று, நீரைத் திருடும் கம்பரசரின் சத்தம், என்னைப் பார்த்து குறைக்கிற வாக்கிங் போகும் நாய், காற்றுக்கு ஆடும் சன்னல். இவைகள் இருந்தும் நான் தனிமையை உணர்ந்தேன். அதனை நான் விரும்பி ஏற்க்கவில்லை, தள்ளப்பட்டேன். அசுரத்தனமான ஓர் அலை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தது. சொர்க்கத்திலே ஓர் நரகம் என்றால், அது என் மனம்தான். விபத்தில் கை, கால்களை இழந்து எத்தனையோ பேர் வாடுகிறார்கள். அதுபோல ஏதும் விபத்தில் என் மனதை இழந்தால் மிகவும் மகிழ்வேன். துன்பத்தை மட்டுமே தருகிறது இந்த மனம். தாங்கி கொள்ள முடியாத துன்பம். சித்தபிரமை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தேன். வாழ்க்கையை மறுபடியும் எண்ணிப் பார்த்துக் கொண்டே இருந்த

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

இடப்பக்கம் நீண்ட சாலை, அதன் முழுவதும் யாரோ மலர்களை கொட்டி வைத்திருந்தனர். ஒருவேளை இருபுறமும் வளர்ந்து நிற்க்கும் மரங்களின் வேளையாய் இருக்கும். எவரும் அதில் பயணம் மேற்க்கொண்டதில்லை என்று சொல்கிறதா அந்த மலர்கள்?  இல்லை யாரையேனும் வரவேற்க்க காத்திருக்கிறதா? தெரியவில்லை. அது சாலையா இல்லை சோலையா? விழிகள் மெதுவாய் நடை போட்டது. வெண்ணிற கொடியில் சிவப்பு நிற இதயம் ஏற்றப்பட்டிருந்தது.பூக்கள் கொடிக்கம்பத்தின் காலடியில் கிடந்தன. இதயத்திலிருந்து வழிகிற குருதி அந்நிறத்தையே கொடுத்திருக்குமோ? எனக்கு நேர்ரேதிரே அந்த கொடிக்கம்பம். காற்றினால் இதயம் பறந்து கொண்டிருந்தது. குவிந்த உள்ளங்கை போன்றே இருந்தது அந்த ஏரி. கிணற்றில் நீரை சேந்துவது போல் வானம் நீரை திருடிக் கொண்டிருந்தது. உள்ளங்கை சரிவு போல உள்ள அதன் பள்ளத்தாக்கில் காப்பிச் செடிகள். காபிச் செடிகளுக்கு நடுவே ஆழகிய ஏரி அமர்ந்திருந்தது. மோட்சம் கிடைத்தால், நீர் கூட ஆவியாகித்தான் வானுலகம் செல்ல வேண்டும் போல. மோட்சம் கிடைத்த நீர், காபிச் செடியில் அப்போது தான் வெளிவந்த இளந்தளிரை தடவிச் சென்றது. இளந்தளிர் மேல் சிறு துளி கண்ணீர். நீண்

பிழை திருத்தம்

பேருந்து திணறியது, கியர் மாற்ற கூட இடம் இல்லை. ஆனால் சூரியன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தன் சுடுகதிரை கூட்டதிற்க்கு நடுவே செலுத்தினான். கதிர் மட்டுமே நுழைய முடிந்த இடை வெளியில் கண்டக்டர் நுழைந்து வருவது ஏதோ மந்திரம் காட்டுவது போல இருந்தது. அவர் தொடர்ந்து மந்திரங்களை காட்டிக்கொண்டிருந்தார், எல்லோர் கையிலும் டிக்கெட். சாதி, மதங்களை மறந்து கூட்டம் சுயநலத்தால் பிணைந்திருந்தது.  முகத்தில் அப்படியொரு களைப்பு. பிள்ளைகளை சோறுட்டி, சீராட்டி பின் பள்ளிக்கு அனுப்பி விட்டு, தன் கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முடித்துவிட்டு, தனியாக அவதிப்படும் நோயளி அம்மாவுக்கு ஓடிப்போய் தன் தாய் வீட்டுக் கடமையை ஆற்றிவிட்டு, தன் இடுப்பை மறைக்கும் சேலையை இழுத்துவிட மறந்துவிட்டு, ஆபிஸ் கவலையில் முழ்கிப்போனால் அந்தப் பெண். ஆனால் அவனுக்கோ அது காமமுரும் இடமாய் மாறியது. ஒருவேளை அவன் அவளுடைய முகத்தைப் பார்த்திருந்தால் அந்த விதமாய் செய்திட தோன்றியிருக்காது.  முதலில் ஏதோ தெரியாமல் தான்படுகிறது என்று கவனக்குறைவாக விட்டுவிட்டாள். நேரமாக ஆக அந்த கை தவறுகளை தொடர்ந்தது. சட்டென புரியாமல், கொஞ்ச கொஞ்சமாய் தான் புரிய துவங்கிய

உதிராத வெள்ளை பூ

மேக அணையை யாரோ முன் அறிவிப்பு இன்றி திறந்துவிட்டது போல இருந்தது நேற்று பெய்த மழை. தண்ணீரே பாத்திராத எங்கள் கிராமத்தில், கங்கையும், காவிரியும் கரைபுரண்டோடியது. நிரைமாத கர்ப்பினி, எப்பொது வேண்டுமானாலும் தன் பிள்ளையை பூமியில் செனிக்க வைக்க தாயாராய் இருந்தது வானம் . உள்ளங்கையில் மஞ்சள் வண்ணத்தை பூசி திறந்து வைத்தாற்போல கள்ளிச் செடிகளின் பூக்கள் மலர்ந்திருந்தது . நீரோடியதால் நிலம் இரண்டாக பிளந்து வடுவாய் மாறியது. மனம் வடுவில் மாட்டிக்கொண்டு தவித்தது. என் கால்கள் மெதுவாக தலைவாசலை நோக்கி நடைபோட்டன. சாமி எப்ப வந்தீங்க? என்ற கேள்வி நடை பயணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது. நான் பதில் எதுவும் கூறாததால், காது கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டாள் போல. தன் முன்னிற பல் வரிசையைக் காட்டிக் கொண்டு, மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் எண்பது வயது மதிக்கத்தக்க நாசுவன் சாதியை சார்ந்த குப்பா. ம்.. இன்னக்கு தா காலைல வந்த குப்பா என்றேன், இருபத்தைந்தை வயதை  தாண்டாத கவுண்டன் சாதியை சார்ந்த நான். குப்பா நல்ல கருப்பு நிறம். தன் கனமான உடலை வெள்ளைச் சேலையைக் கொண்டு மூடியிருந்தாள். கைகளின் அனேக

முத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி

இது 1000 வது தடவை . . நான் அவளை காதலிக்கிறேன் என்று சொல்வது . அலட்சியமான ஒரு பார்வை , இன்னும் எத்தனை முறை தான் சொல்வது என்பது போல உதடுகள் . அவளது முகமலர் இடதுபுறம் எங்கொ பார்த்துக் கொண்டிருந்தது . காபி கப் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத்தான் , காபி சாப்பில் இருக்கிறோம் என்ற நினைவே வந்தது . காபி கப்பிலிருந்து ஆவி மெல்ல மேலே பறந்து , பின் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கொண்டது . சுற்றுமுற்றும் பார்த்தேன் . யாரும் எதையும் கவனிப்பதாய் தெரியவில்லை . இன்னும் அவைகள் தழுவிக் கொண்டுதான் இருந்தன . காபி , புகை பிடித்துக் கொண்டிருந்தது . ஆணி அடித்த பலகையில் " புகை தடை செய்யப்பட்ட பகுதி " என்று எழுதியிருந்தது .  அவரவர் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர் . சிகை திரைச்சீலை போல , என் கண்களுக்கும் அவள் முகத்துக் இடையே விழுகிறது அடிக்கொருதரம் . உணர்ச்சியை மறைத்துக் கொள்ளு ( ல்லு ) ம் புதிய முறையா ? கைகள் வைப்பரைப் போல அடிக்கடி துடைத்துக் கொண்டே இருந்தது . அந்த மிருதுவான விரல்களை தொட வேண்டும் என