Skip to main content

நான் யார்? பகுதி-2


 ஒரு மேகம் மட்டும் தனித்து விடப்பட்டிருந்தது. அதைப் பார்க்க தீவு போல தோன்றிற்று. கைவிட்டு விட்ட திறளான மேகக்கூட்டம் தூர நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தனித்துவிடப்பட்ட மேகம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. சூரியன் மேகக்கூட்டத்திற்க்குள் ஒழிந்து கொண்டு, தன் கதிர்களால் கொரில்லா முறை தாக்குதலை என் மீது தொடுத்தான். சிமென்ட் அட்டை மேய்த இரயில் நிலைய பிளாட்பாமின் சிறு சிறு ஓட்டைகளின் வழியாக கொஞ்ச நேரத்திற்க்கு முன்னரே பெய்த மழைத்துளி என் கைகளை பதம் பார்த்தது. அன்னாந்து பார்த்தேன். பக்கத்தில் தண்ணீர் உட்காந்திருந்ததால் மேலும் நகர முடியாத நிலைமை. சூரியன் சுடும் போது முதல் முறையாக மழைத்துளியால் நனைந்தேன் மற்றவரெல்லாம் வேர்வையில் நனையும் போது.
இரயில் நிலையம். மக்கள் கூட்டம் நிறைந்து, நின்றிருந்தனர், ஒரே ஒரு இரயில் மட்டும் கிளம்பியது. ஒருவர் மூன்று பெட்டிகளை தூக்கமுடியாமல் கஷ்டப்பட்டு ஊர்ந்துவந்தார். பொர்ட்டர் வெறும் கைகளை வீசிக்கொண்டு அவருடனே வந்தார். அந்த காட்சி என்னை ஆச்சரியப்படுத்திவிட்டது. இருவரும் என்னை நெருங்கி வந்தனர்.
சார் இதுக்கு மேல எவ்வளவு கமியா தருவ? என்ற கேள்வியை எழுப்பியவாறு பொர்ட்டர் தொடர்ந்தான்.
பதில் எதும் வருவதாய் தெரியவில்லை. மௌனமாக அவர் தன் பெட்டிகளுடன் கண் மறைந்து சென்றார்
கிளம்பிய இரயில் வேண்டும் மற்றும் வேண்டாம் என்ற இரு ஸ்டேசனுக்கு இடையில் என் மனதை அதிர வைத்திக்கொண்டு, என் மனதுக்குளேயே ஓடுவது மாதிரி இருந்தது. முடிவுகளை எடுத்துதான் இங்கேயே வந்தேன். இருந்தும் மனம் இரயில் பயணங்களையே மேற்க்கொண்டது.
என் செல்போனில் வந்த அந்த அழைப்பு வேர்வைக்கு அழைப்பு விடுத்தது. ஆங்கில எழுத்தினை கண்டபடிக்கு அழுத்தி பெயரை பதிவு செய்திருந்தேன்.
ஓரிரு முறை யோசித்துவிட்டு போனின் அழுகையை நிறுத்தினேன்.
“ஹலோ”, தயங்கியபடி என் வார்த்தைகள் வெளி வந்தது. யாரும் என் வார்த்தைகளை கேட்க்ககூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தேன்.
சார்.. எங்க இருக்கீங்க? சற்றேரக்குறைய சந்தேகமாக கேட்டான். 
 நார்த் பொண்ணு 6000 ரூபா. வந்துட்டு கமிச்சு எல்லாம் கேட்க்காதீங்க.. ஒரே ரேட் என்றான் அழுத்தமாக.
இவனிடம் என்ன பேரம் பேசறது இப்ப? யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது என்பதே முக்கியமாகப்பட்டது.
ம்.. சரி சரி என்று சொல்லி சுற்றும்முற்றும் ஒரு தடவை பார்த்தேன் யாரும் கவனிக்கிறார்களா என்று. பின்பு போனை பேன்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன்.
பயணிகள் அன்பான கவனத்திற்க்கு. வண்டி எண் 64646 விழுப்புரம் சென்னை இரயில் இன்னும் சற்று நேரத்தில் தடம் எண் 6க்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டென ஆங்கிலத்திற்க்கும், ஹிந்திக்கும் மாறி மாறி அறிவித்தாள் அந்த கணிப்பொறி பெண். எனக்கு தெரிந்த வரையில் இந்த பெண்தான் இரவு பதினொருமணி வரையிலும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் தனியாக பயமின்றி பேசமுடிகிறது.
அறிவிப்பை கேட்ட எல்லோரும் ஆவலாய் நின்ற இடத்தைவிட்டு இரண்டடி முன்னே நகர்ந்து எட்டி தண்டவாளத்தை பார்த்தனர். நான் உட்காந்திருந்த பென்ஞ்ச் இரயில் வருவதை மறைக்கும் விதமாக நிலைய அதிகாரியின் அலுவலகம் கட்டப்பட்டிருந்தது. ஆவல் தாங்கமுடியாது, என் பக்கத்தில் உட்காந்திருந்தவர் எழுந்து போய், மேடையின் விழும்பில் நின்று பார்த்தார். கோக்ககோல பாட்டலில் குழாய் தண்ணீர், பல வருடம் தலை வாராத முடி, செம்மண்ணால் கலரிங் செய்யப்பட்டதாய் இருந்தது. சட்டையும், பேன்ட்டும் பல இடங்களில் கிளிந்து போய்க்கிடந்தது. கறைபடிந்த பற்களை காட்டிக்கொண்டு எங்களை நோக்கிவந்தான். இரயிலை எதிர்பார்த்த எல்லோர்க்கும் சற்று ஏமாற்றம் தருவதாய் இருந்தது அவன் வருகை.

ஏதோ இராணுவத்தில் நடக்கும் மார்ச் பாஸ்ட் போல இருந்தது. அறிவிப்பைக் கேட்டதும் முன்னே நகர்ந்த மக்கள், பிச்சைக்காரனைப் பார்த்ததும் பின்னே நகர்ந்து கொண்டனர் அவர்அவர் இடத்திற்க்கு. பாவம் என் பக்கத்தில் உட்காந்திருந்தவருக்கு இப்பொது இடம் கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அந்த இடத்தை நிரப்பிவிட்டார். பொது இடத்தில் இருக்கும் பெங்ஞ்செல்லாம் மியுசிக் சேர் போல தான், தவறவிட்டால் யாரோ ஒருவர் உட்காந்துவிடுவார்.
என்ன நாடுனே புரிலை. சொன்ன நேரத்துக்கு என்னதா வந்திருக்கு இதுவர? தன் இடம் பறிபோன வருத்ததை நாட்டின் மேல் கொட்டினார். சுவற்றுக்கு ஆதரவாய் தன் கையை அதன் மேல் வைத்திருந்தவரை கடந்து இடப்பக்கம் என் பார்வையை செலுத்தினேன்.
அட..அந்த பிச்சைக்காரனுக்கு இடம் கிடைத்துவிட்டதே! கால் மேல் கால் போட்டு தண்ணீர் பாட்டிலை மடியில் வைத்து உட்காந்திருந்தான். பார்க்க இளைத்துப்போயிருந்தவன் போல இருந்தான். மாம்பழத்தை உறிஞ்சிக்கொண்டு யாரோ கொட்டையை மிச்சமிட்டது போலிருந்தது அவன் தோற்றம். ஒருகாலில் பெரகான் செறுப்பு, மறுகாலில் பெட்டா செறுப்பு. அவன் அழகில் முழ்கிப்போனதால், அவனுக்கு பக்கத்தில் இருந்தவளை அதுவரை கவனிக்க தவறிவிட்டேன். வெள்ளை நிற கெட்போன் கூந்தலுக்குள் மறைந்து போனது. விரித்த கூந்தல் அவள் கண்களுக்கும் காட்சிக்கும் இடையே திரைச்சீலையைப் போல விழுவதால், அவள் கையை வைப்பரைப் போல உயர்த்தி துடைத்தால் அடிக்கொருதரம். ரொலக்ஸ் வாட்சை தெரிகிறது. உயரமான செறுப்பு, மாடனான உடை. பெஞ்சின் ஓர் முனையில் பிச்சைக்காரன், மறுமுனையில் அவள். சுதந்திரமாய் குரங்கு ஓடியது, அதன் காலில் கட்டப்பட்டிருந்த கயிறு இழுத்ததும் குரங்கு தலையை திருப்பி குறவனைப் பார்த்தது. பாவம் குரங்கு என்பதைப் போல இருந்தது அவள் பார்வை. 
கண்களை இன்னும் சிறிது நேரம் பார்த்தால் பாதிப்பை ஏற்ப்படுத்தலாம். ஒருவேளை ரிக்டர் அளவுகோளில் 8 என என் மனதின் நடுக்கத்தை காட்டும். அப்படி நடந்தால் சேதாரத்தின் அளவு அதிகமாகலாம். சட்டென சுயநினைவுக்கு வந்தேன்.
மக்கள் கூட்டம் திரும்பவும் மார்ச் பாஸ்ட் செய்ய ஆரம்பித்திருந்தது. இதற்க்கு மேல் என்னாலும் இருப்புக்கொல்ல முடியவில்லை. எழுந்து போய் நானும் தண்டவாளத்தை பார்த்தேன். இனி மேல் யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாமென்று வந்துகொண்டிருந்தது அந்த இரயில்.
ஒரு பெண் போனில் யாருடனோ பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தால். இரயில் இராவனை போல் அந்தப் பெண்னின் உயிரை கவர்ந்துகொண்டு வந்தது.
அய்யோ! பலர் ஒருசேரக் கத்தினர். சிலர் அந்த உடலை நோக்கியும் ஓடினார். நான் அங்கேயே டெலிப்போன் டவர் போல நின்றேன். இதற்க்குள் இரயில் ஸ்டெசனைக்கு வந்து நின்றது. நான் சற்று தைரியத்தை வளர்த்திக்கொண்டு முன்நகர்ந்து பார்த்தேன். தண்டவாளம் முழுவதும் இரத்தம். அதற்க்குமேல் பார்க்க மனமின்றி கண்களை மூடிக்கொண்டேன். உடல் நடுங்க தொடங்கியது.
மேம் பாலம் அவள் உடல் சிதறிய இடத்திற்க்கு மேல் உற்ச்சாகமின்றி நின்றிருந்தது. என் மனதிக்குள் சட்டென இவ்வாறு தோன்றியது. சீதையை மீட்க்க கஷ்ட்டப்பட்டு பாலத்தைக் கட்டினார்கள். ஆனால் ஏற்க்கனவே கட்டி வைத்திருந்த பாலத்தில் போயிருந்தால் மீட்க்கவேண்டிய வேலையே இருந்திருக்காது. தலையிலும், உடம்பிலும் அடித்திக்கொண்டு ஒருவன் அழுதாவாறு பாதியாகிப் போன உடலுக்கு பக்கத்தில் உட்காந்திருந்தான்.
போனும் கத்த தொடங்கியது. இதுவரை கட்டி வைத்திருந்த தைரியத்தையும் சேர்த்தே இரயில் இடித்துடைத்தது.

கயிற்றால் கட்டப்பட்ட குரங்கைப் போல வீட்டை நோக்கி என் கால்கள் நடந்தது.   

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ