Skip to main content

முத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி


இது 1000வது தடவை. . நான் அவளை காதலிக்கிறேன் என்று சொல்வது. அலட்சியமான ஒரு
பார்வை, இன்னும் எத்தனை முறை தான் சொல்வது என்பது போல உதடுகள். அவளது முகமலர் இடதுபுறம் எங்கொ பார்த்துக் கொண்டிருந்தது. காபி கப் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத்தான், காபி சாப்பில் இருக்கிறோம் என்ற நினைவே வந்தது.

காபி கப்பிலிருந்து ஆவி மெல்ல மேலே பறந்து, பின் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கொண்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் எதையும் கவனிப்பதாய் தெரியவில்லை. இன்னும் அவைகள் தழுவிக் கொண்டுதான் இருந்தன.

காபி, புகை பிடித்துக் கொண்டிருந்தது.ஆணி அடித்த பலகையில் "புகை தடை செய்யப்பட்ட பகுதி" என்று எழுதியிருந்ததுஅவரவர் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.

சிகை திரைச்சீலை போல, என் கண்களுக்கும் அவள் முகத்துக் இடையே விழுகிறது அடிக்கொருதரம். உணர்ச்சியை மறைத்துக் கொள்ளு(ல்லு)ம் புதிய முறையா? கைகள் வைப்பரைப் போல அடிக்கடி துடைத்துக் கொண்டே இருந்தது. அந்த மிருதுவான விரல்களை தொட வேண்டும் என எழுந்த ஆவலை அவளது விழிச்சுடரில் சுட்டு சூன்மாக்கினேன்.பேசுவாள் என எதிர்பார்ப்பது பேராசை. கடந்த கால வரலாறும் இதைதான் கூறிற்று. சுற்றி ஒரு முறை பார்த்தேன்.

சானு காபி என்று பெயர் சொற்க்களை மட்டும் தான் உச்சரித்தேன், வினைச் சொற்களைச் சொல்லி இன்னும் வினையைக் கட்டிக் கொள்ளும் முன்பே எழுந்து கொண்டாள். ஒருவேளை  பிடிக்கவில்லை போலும் காபியை. எனக்கு பிடித்திருந்தது. குடித்துக் கொண்டிருந்தேன், அவள் நடந்து கொண்டிருந்தால்.

கொஞ்ச தூரம் சென்றதும், திரும்பி என்னைப் பார்த்தால். சட்டென காபி கப்பை டேபிளில் வைத்தேன், அவள் பார்வை மற்றோருமுறை சுட்டுவிட்டது. காபி கூட பயந்து கப்பிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது,என்னைச் சுட்டது. சட்டை மேல் விழுந்த காபி துளிகளை கையால் துடைக்க நேரமின்றி எழுந்து ஓடினேன். அவளைப் பற்றி புரிந்ததெல்லாம் புரியவில்லை, புரியாததெல்லாம் புரிந்து கொண்டேன். புரிந்ததும், புரியாததும் அடிக்கடி தனக்குள் குழப்பிக்கொள்ளும்.

அவளை நெருங்கவும், என்னை நேர்ரேதிர் பார்த்து அவள் நிற்கவும் மிகச் சரியாக இருந்தது. நிர்வாண உதடுகள் இடைக் கால நிவாரனம் தேடியது. வழங்கப்பட்டது நிவாரனம். ஆணி அடித்த பலகை தொம்மென விழுந்த சத்தால், நிவாரனம் நிறுத்தப்பட்டது. நான் சுற்றி எல்லோரையும் பார்த்தேன். இப்போது மட்டும் அனைவரும் என்னைப் பார்த்தனர். என் மனைவியை விடுத்து நான் மட்டும் எப்படி காபி குடிக்க, மனதுக்குள் கேட்டேன் எல்லோரையும் பார்த்து.
அவளுக்கு பிடித்திருக்கும் போல என்னையை. நேற்று நடந்த சண்டை முடிவுக்கு வந்தது தற்காலிகமாய். 300வது முறையாக முத்தத்தில் தொடங்கிணோம் எங்கள் ஊடலை.

 

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ