Skip to main content

பிழை திருத்தம்

பேருந்து திணறியது, கியர் மாற்ற கூட இடம் இல்லை. ஆனால் சூரியன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தன் சுடுகதிரை கூட்டதிற்க்கு நடுவே செலுத்தினான். கதிர் மட்டுமே நுழைய முடிந்த இடை வெளியில் கண்டக்டர் நுழைந்து வருவது ஏதோ மந்திரம் காட்டுவது போல இருந்தது. அவர் தொடர்ந்து மந்திரங்களை காட்டிக்கொண்டிருந்தார், எல்லோர் கையிலும் டிக்கெட். சாதி, மதங்களை மறந்து கூட்டம் சுயநலத்தால் பிணைந்திருந்தது.
 முகத்தில் அப்படியொரு களைப்பு. பிள்ளைகளை சோறுட்டி, சீராட்டி பின் பள்ளிக்கு அனுப்பி விட்டு, தன் கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முடித்துவிட்டு, தனியாக அவதிப்படும் நோயளி அம்மாவுக்கு ஓடிப்போய் தன் தாய் வீட்டுக் கடமையை ஆற்றிவிட்டு, தன் இடுப்பை மறைக்கும் சேலையை இழுத்துவிட மறந்துவிட்டு, ஆபிஸ் கவலையில் முழ்கிப்போனால் அந்தப் பெண். ஆனால் அவனுக்கோ அது காமமுரும் இடமாய் மாறியது. ஒருவேளை அவன் அவளுடைய முகத்தைப் பார்த்திருந்தால் அந்த விதமாய் செய்திட தோன்றியிருக்காது.
 முதலில் ஏதோ தெரியாமல் தான்படுகிறது என்று கவனக்குறைவாக விட்டுவிட்டாள். நேரமாக ஆக அந்த கை தவறுகளை தொடர்ந்தது. சட்டென புரியாமல், கொஞ்ச கொஞ்சமாய் தான் புரிய துவங்கியது அவளுக்கு. அந்த கால இடைவெளி அவனுக்கு சாதகமாய் தோன்றிற்று. மூளைக்கு இதைப் புரிந்தவுடன் சட்டென கைகளை தட்டிவிட்டாள். அனுமதிக்கிறாள் என்றேனியவன் உணர்ந்து கொண்டான் ஆமொதிக்கிறாள் என்று. சில நொடிகள் களிந்த பின் மீண்டும் அதே தவறைத் தொடர்ந்தான். அவளுக்கு கவலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுவிட்டது மேலும் இது பெறும் துயராய் அமைந்தது.
மீண்டும் அவள் தட்டிவிட, அவன் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியும் இவள் ஊமை தான், நமக்கு ஒன்றும் பெரிதாக ஆகாது என்று எண்ணிக் கொண்டு தன் தவறை அறங்கேற்றினான்.  கைகளால் சண்டையிட்டு வெற்றி கொள்ள முடியவில்லை. தோல்வியின் அடையாளமாய் அவள் கண்கள் பனித்தன. கண்டக்டர் சீட்டு கேட்டுக் கொண்டிருந்தார். சூரியன் இன்னும் ஏணோ பொதுவாய் எல்லோரயும் சுட்டுக் கொண்டிருந்தது, பக்கத்தில் நின்றவர் தன் மகன் வெளி நாட்டில் வேலை பார்ப்பதை பெறுமையாக பேசிக் கொண்டிருந்தார். யாரும் இவள் கஷ்டத்தை கவனித்ததாய் தெரியவில்லை.
 அம்மா இதோ பாரு ரொம்ப நோரமாய் அந்த அத்தை ஆழறாங்க, பக்கதுல இருக்கற மாமா, அத்தையை இடுச்சுக்கிட்டே இருக்காங்க என்றான் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்.
அதுவரை கவனிக்காத கூட்டம், கோபமாய் அவன் பக்கம் திரும்பியது. அதுவரை பெண்களுக்கே தெரியாமல் உரசிக் கொண்டிருந்த மனிதகழிவுகள், அவனை நோக்கி கூட்டத்தொடு சேர்ந்து கோப பார்வையை உமிழ்ந்தது. அவள் வேர்வையோடு சேர்ந்து, கண்ணீரும் சிந்தியனாள். படபடப்பானாள், கண்ணீர் வரத்து அதிகரித்தது. கூட்டதின் கோபமும் அதிகமானது.
பொம்பளை இப்படி அவுத்து போட்டா, ஆம்பளை என்ன பண்ணுவான் என மனதுக்குள் சிலர் அவனுக்கு வக்காளத்து வாங்கினார். ஆனால் அந்த சிலரின் துணைவியார் இந்த பேருந்தில் பயணம் செய்யவில்லை. அவனை அடிக்கலாமா வேண்டாமா? என கூட்டம் யோசித்துக் கொண்டிருந்த வேளை சட்டென கன்னத்தில் அறை விழும் சத்தம் கேட்டு அனைவரும் தலையை திருப்பினர்.
அம்மா சிறுவனின் கன்னத்தில் இன்னும் சில அறைகளை தந்து விட்டு, அவனைப் பார்த்துக் கேட்டாள், “ இவ்வளவு நேரம் அத்தை அழுகறத பார்த்துட்டு ஏன் சும்மா நின்ன?, வாய திறந்து சொன்னா என்ன முத்தா உதிர்ந்திடும்?”.
ஏம்மா சின்னப் பையனப் பொட்டு அடிச்சா அவன் என்ன பன்னுவான் என்றார் அங்கே நின்ற ஆசாமி ஒருவர்.
கடுங்கோபத்தில் அம்மா அவரை முறைக்க கூட்டம் வாய் அடைத்து போனது. கையில் வைத்திருந்த இரண்டு வயது மகனைப் பார்த்தேன். அந்த அம்மாவையும், அவனையும் பார்த்தேன். என் மகனை மிக கன்னியமானவனாக வளர்க்க வேண்டுமென அப்போதுதான் தோன்றிற்று.

 பேருந்து அமைதியாக காவல் நிலையம் நோக்கிச் சென்றது. யாரும் அவனை அடிக்கவில்லை மாறாக ஆண்கள் காமத்தை விட்டு எப்போதும் போல பக்கத்தில் நின்றனர்.   

Comments

  1. Nice story.. A lesson to all to have some value system in their mind.. Which can be done.. Whish should not be...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

  எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்),  நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன? "அறத்தான் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர்  சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான்.  இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மறைந்த பிறக

எரிமருள்

  இ ந்த பூத்தவேங்கையின் உள்ளிருந்து ஓசையற்ற காலடிகளுடன், கூர்ந்த மூக்குடன், விழித்த கண்களுடன், மெல்லமடிந்த சிறிய காதுகளுடன் உன்னை நோக்கி வருகிறேன். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எனச் சில ஒவ்வொருவருக்கும் இருக்கும். சாமனியனிம் அந்த தருணம் மறக்கப்பட்டுவிடுகிறது, ஆனால் கலைஞனுக்கு அது உச்ச தருணாமாகிறது. "முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்".  கவித்துவமான கதை. மெளனி அவர்களின் கதை போன்றது. இந்த கதையின் வாசல் எனக்கு இன்னும் திறக்கவில்லை. மறுவாசிப்புக்கு சில காலம் கழித்து உட்ப்படுத்தினால் திறக்கலாம். இதே போன்ற ஆசிரியரின் மற்ற கதைகள் படித்தால், நிச்சயம் விளங்கும்.  வருங்காலங்களில் மீண்டும் குறிப்பு எழுத வேண்டும்.