பேரமைதியாய் அந்த பஸ் நகர்ந்து கொண்டிருந்தது. வானளாவிய மரங்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்தது. மரங்களின் பெயர் இன்னதென்று தெரியவில்லை, முன்பின் அறியாத மரமாய் இருந்தது. தீர்த்தமாய் சில துளிகளை மட்டும் மேகம் தெளித்தது. அதைப் பார்க்க மரத்தின் நுனி மேகத்துக்குள் நுழைந்து, தீர்த்தத்தை தெளிக்க வைத்தது போல இருந்தது. காற்று தன்னை தூய்மையாக்கி, பின் எங்களைத் தழுவி மாசுற்று, திரும்பவும் தன்னை தொடர்ந்து தூய்மையாக்கிக் கொண்டிருந்தது. என்றாலும் எங்கள் மாசு குறையாவுமில்லை, நாங்கள் மாறவுமில்லை. நீ ஏன் வந்த ? கோபமாய் அந்த பெண் நீல நிற சட்டை அணிந்தவனிடம் கேட்டாள் . இரண்டு சீட்டுக்கு பின்னால் எப்படா பேசுவாள் என்று காத்துருந்தவனுக்கு சந்தோஷம் . நீயே போனதுக்கு அப்புறம் நா மட்டும் இருந்து என்ன பன்னப்போறன் ? அதான் வந்துட்டன் , மகிழ்ச்சியாய் பதிலுரைத்தான் . வாளைப் போல நான்கு முடிமட்டும் நெற்றியிலிருந்து கயல்விழிக் கருமணியை மறைத்து , அவள் கூரான மூக்கின் மேல் வாள் சண்டையிட்டது . அந்த முடியின் முனையில் நீல நிற சட்டை அணிந்த பையனின் மனதை கட்டிக்கொண்டு , காற்றுக்கு அது ஊசல்குண்டைப் போல ஆடியது .
எழுதுதல் ஒருவகை அறிதல் முறை, அதனால் எழுதுகிறேன்.