Skip to main content

நான் யார்? -பகுதி - 11

இருள் ஆக்ரோசமாய் எங்கும் பரவியிருந்தது. என் உடலை காரிருள் தின்றிருந்தது. எல்லா பொருட்களும் தனக்கு முன்னே திரை கட்டிக்கொண்டு என் கண்களிலிருந்து மறைந்தது. என் நினைவுகள் மட்டும் சுடர்விட்டது. பல நாட்கள் அந்த நாய் என்னை அதன் இடத்தில் சேரவிடவில்லை. ஒரு வழியாய் சில தினங்களில் அதன் இடத்தை பங்கு போட்டுக்கொண்டேன். அதற்க்கெதுவும் தீங்கில்லை என்றதும், என்னை ஆதரித்தது. அதன் ஆத்மாவுக்காக இரஞ்சினேன். என் ஆத்மாவை எண்ணி ஏங்கினேன். முகப்பு விளக்கின் வெளிச்சம் தாடியை நக்கி கடந்து சென்றது. அந்த ஒரு நொடி வெளிச்சம் மனதுக்குள் ஏதோ பண்ணியது. இருட்டுக்கு பழகிப்போன கண்களை, நொடி வெளிச்சம் அந்நியமாக்கியது. காற்று மரங்களுடன் சல்லாபித்திருந்தது. சில இலைகள் தலையின் மேல் உதிர்ந்ததும், அன்னாந்து பார்த்தேன். அலைகள் எதுவுமில்லாத நீல நிறக்கடலைப் போல, மேகமில்லாது வானம் இருந்தது. இந்த உடல் நானில்லை, மனம் வேகமாகச் சொல்லியது. பிறகு தீர்மானமாக்கியது. ஆத்மா அந்த வெளிச்சத்தைப் போல, விழும் போது நாம் தெரிகிறோம், அது கடந்ததும் நாம் மறைகிறோம். உயிர் செனிக்கும் வேளையிலே அதன் மரணமும் நிச்சயமாகிறது. வருந்தி என்ன பயன். அப்படியானால் நான் யார்? ஓயாத கேள்வி சுனைநீராய் வந்தது.
ஆதவன் தன் ஜீவ ஆதார கதிரை அடிவானில் எழுப்பினான். கண்கள் நன்கு சிவந்து, விழியைச் சுற்றி கருவளையம் இருந்தது. ஆடாமல் அசையாமல் அப்படியே உட்காந்திருந்தேன். சூரியன் நன்றாக எழுந்து உயரத்திற்க்கு வந்திருந்தான்.
எப்போதும் போல அன்றும் கூட்டம் களைகட்டியிருந்தது பஸ்டாப்பில். ஒரு பஸ் வரும் நாங்கைந்து பேர் ஏறுவார்கள், அடுத்த பஸ் வரும் மறுபடியும் நாங்கைந்து பேர் ஏறுவார்கள், என்றாலும் கூட்டம் குறைவின்றி இருந்தது. அந்த கேள்வி மட்டும் மனதுக்குள் ஏதோ பண்ணியது. பசியை மறைத்தது. அந்த கேள்விக்கான விடை மட்டும்தான் உணவாகும் எனப்பட்டது. அவன் வரவில்லை. காமகொடுரமான பார்வையை இனி ஒருபோதும் காணமுடியாதேன்றே தோன்றிற்று. காற்று தன் பங்கிற்க்கு கொஞ்ச மணலை என்மேல் தூவியது. உயிர்கள் பிரியும் போது துயரம் மிக்கதாய் இருக்கிறதே! இந்த துயரத்திற்க்கு ஒரு முடிவில்லையா? நான் இவற்றிலிருந்து விடுபடவேண்டும். நான் யார் என்று அறியவேண்டும் என்று மனம் கொதித்தபோது, நீங்க தெய்வம் சாமி.. தெய்வம் என்று ஒரு நடுத்தர வயது மதிக்கதக்க பெண் கன்னடாவில் சொல்லிக்கொண்டு என்பக்கத்தில் வந்து நின்றிருந்தாள். என் தலையை மெதுவாக தூக்கிப்பார்த்தேன், நேற்றிறவு நான் காப்பாற்றிய இளைஞியும் அவள் பக்கத்தில் நின்றிருந்தாள். முதலில் அவள் சொல்வதின் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆனால் இப்போதுதான் புரிகிறது. என் முகம் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்ப்படவில்லை. நேராய் அவர்களைப்பார்த்தேன்.
அவள் சூடம், பத்தியைப் பற்றி வைத்து, கொஞ்சம் சாப்பாடும் வைத்தாள். அதுவரை துற்நாற்றம் வீசிக்கொண்டிருந்த அந்த இடம் அது முதல் வாசனையானது.
உங்களுக்கு எப்படி கைமாறு செய்யறதுனே தெரியல. கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது.
நான் பதிலேதும் சொல்லவில்லை.
அவளே தொடர்ந்தாள். சாமிக்கு எப்படி கைமாறு செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு, நெடுசானாய் என் கால்களில் விழுந்து வணங்கினாள், அந்த இளைஞியும்.
சூடம் காற்றுக்கு ஆடியது. எல்லோரும் எங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.
மணம், காமம், இந்தப் பெண், அங்கு நிற்பவர்கள், என் காட்சி எல்லாம் மாயையாய் தோன்றியது. ஒரு நொடி எனக்குள் போரானந்தம் சுரக்க ஆரம்பித்தது.
அந்த வழியாக நடந்து போன சிறுவன் ஒருவன், தன் அம்மாவிம் கைகளைப் பிடித்திக்கொண்டு கேட்டான். “இவரு யாரு?”.

சட்டென சொன்னேன். “நான் கடவுள்”.     

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ