Skip to main content

நான் யார்? -பகுதி - 7

இரண்டு சிங்கங்கள் திறந்த வெளியில் மாறிமாறி ஒன்றையொன்று அடித்துக் கொண்டது. முடிவில் ஒரு சிங்கம் பின் வாங்கியது துரதிஷ்ம். வெற்றி பெற்ற சிங்கத்தின் கர்ச்சனை நான்கு பக்கமும் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரின் வழி என் காதுகளை வந்தடைந்தது. ஒருவழியாய் போட்டி முடிவுக்கு வந்தது. அது அதற்க்கெனவெ காத்திருந்த பெண் சிங்கத்துடன் இணை சேர ஆரம்பித்தது.
அனிமல் பிளனெட்டில் ஓடிக் கொண்டிருந்த இந்த காட்சி தாமஸ் வீட்டு தொலைக் காட்சியில் வந்தது. நான் சோபாவில் கால்களை தரையில் படுமாறு அழுத்தி உட்காந்திருந்தேன். எலுமிச்சை பழச்சாறு எனக்கு முன்னால் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் விதைகள் சாவுகாசமாக கோப்பையின் அடியில் குடித்தனம் நடத்த நகர்ந்த வண்ணம் இருந்தது. நடப்பதின் வீபரிதம் புரியாமல் பழச்சாறின் சக்கை நீச்சல் அடித்தது. ஆகமொத்தம் அந்த பழச்சாறு ஒரு குழம்பிப்போன குட்டையானது.
கவிழ்த்த தலையை நிமிர்த்தாமல் எனக்கு பக்கவாட்டு சோபாபில் அமர்ந்திருந்தால் சானு. அவளது எண்ண ஓட்டத்தை கணிக்க முடியாதபடி சிகை அவளுக்கும் எனக்கும் இடையே திரைச்சீலையானது. என் நிலைமை தர்மசங்கடமாய் தோன்றினாலும், நான் செய்வது சரியென்ரே தோன்றிற்று.
ம்.. சொல்லுங்க என்ன விஷயம்? என்றார் தாமஸ், குரலில் எந்தவித உணர்ச்சியும் இன்றி. பொதுவாக வேலைக்கு சிபாரிசு கேட்டு வரும் ஆயிரத்தில் ஒருவன் என நினைத்துவிட்டார் போலும். சானு சொல்லி கேள்விப்பட்டுயிருக்கிறேன்.
மேகத்துக்குள் மறைந்து நிற்க்கும் நிலவைப்போல என் வார்த்தைகள் தெளிவின்றி வந்தது. நா.. சானுவ கல்யாணம் பன்னிக்கலாம்னு. அவளும். வார்த்தை தொடர் வண்டி நின்றுகொண்டது.
சற்று வியப்பானதாய் முகம் மாற பின் சட்டென கோப முகமுடியை எடுத்து மாட்டிக்கொண்டார். ஒருவேளை அவர்க்கு நெற்றிக்கண் இருந்திருந்தால் கண்டிப்பாக சானுவுக்கு அப்புறம் என்னை எரித்திருப்பார். இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்துதான் அவள் தலையை கவிழ்ந்திருக்கிறாள் போலும். திட்டத்தான் போகிறார் என்று எண்ணியது தவறாகிப்போனது.
அந்த ஆண் சிங்கம் மெதுவாக எழுந்து நடக்க தொடங்கியது. அடிவாங்கிய சிங்கம் முள் மறைவில் தன் காயங்களை நக்கியது. கேமிரா சற்று தூரத்துக்கு தூக்கப்பட்டதும் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்துவிட்டு தாமஸை உற்று நோக்கிணேன். அவரது கண்கள் சிவந்திருந்தது. வேகமாக மூச்சு வாங்கினார். எனக்கு கழுத்து பக்கம் லேசாக வேர்த்தது. சானுவின் மழைத்துளிகளை நிலத்தில் பார்க்க முடிந்தது. எப்படியோ உண்ர்ச்சிகளை காட்டிவிட்டாள்.
தவறான ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தினார் பிறகு தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டார். மனிதன் கோபப்படும் போதுதான் அவன் வளர்ப்பு முறை புரிகிறது.
  “ஆர் யு மேட்? கோ டு கெல்” தாங்கிகொள்ள முடியாதவறாய் தன் கைகளை சோபாபின் மேல் தட்டினார்.
நான் எதிர்பார்த்ததுதான் என்று நினைக்கும் முன்பு சட்டென் பாய்ந்து என் கன்னங்களில் அறைந்தார். ம்றுகன்னத்தை நான் காட்டவில்லை ஆனால் அவரே அறைந்தார்.
சானு பின்புறமாய் கட்டிப்பிடித்து அவரை என்னிடமிருந்து விலக்க முயன்றாள். அவர் திமிரியதால் எதிரே இருந்த சோபாவில் இருவரும் விழுந்தனர். சோபாவின் மேல் சானு, அவள் மடியில் தாமஸ்.
நா கல்யாணம் பன்னிக்கிறேனு சொன்னதும், தாமஸ் சானு மடில உட்காந்துடாரே?
நினைவே வராதபடி ஒரு அறை. அவள் தன் இரு கன்னங்களையும் பிடித்துக்கொண்டாள். ஏணோ எனக்கு அவரை தடுக்க மனம் வரவில்லை.
எல்லாவற்றையும் இழந்தவர் மாதிரி சானு உட்காந்திருத்த சோபாவில் சாய்ந்தார். கழுத்தை மேல் நோக்கியவாறு காத்தாடியை பார்த்திருந்தார், கைகள் இரண்டையும் சோபவின் கை மேல் கிடத்தியவாறு.
காத்தாடி ஓடும் சத்தம், சானுவின் மெல்லிய விம்மல், சண்டையில் கிழே விழுந்து உருடும் பழச்சாறுக் கோப்பை, அனிமல் பிளனெட்டின் விளம்பரம், தாமஸின் கோப மூச்சு இதை தவிர வேறு எந்த சத்தமும் இன்றி இருந்தது அந்த அறை.
புதிதாய் ஒரு சத்தம். கதவு திறக்கப்பட்டது. சத்ததைக் கேட்டு தலையை வலதுபுறம் திருப்பினேன். நான்கு வயது மதிக்கதக்க சிறுவன் தாமஸை நோக்கி ஓடிவந்தான். நான் இன்னும் வாங்க போராடிக்கொண்டிருக்கும் உயர்தர மடி கனிணியில் கேம் ஓடியதை திறக்கப்பட்ட கதவின் இடைவெளிவழியாக பார்த்தேன்.
தலையை இடதுபுறம் திருப்புவதற்க்குள்ளாக, தாமஸின் மடியில் ஏறிவிட்டிருந்தான் அந்த சிறுவன்.
சானு தன் முகத்தில் வடிந்த கண்ணீரை துடைத்து தெரிந்தாள்.விம்மலை நிறுத்திவிட்டு. முகத்தை எதுவுமே நடக்காத மாதிரி மாற்ற முற்ப்பட்டாள். 
டாட் ஒய் மாம் இஸ் கிரைங்? முகத்தை பாவமாக வைத்துக் கேட்டான். தாமஸ் முகத்தில் அப்படியொரு ஒரு படபடப்பு. இவனுக்கு எதுவும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்க்காக. அவர் ஏதோ சொல்ல முற்படும் முன்னே.
இவரு யாரு? என்றான் சட்டென. இவன் அம்மா அழ நான்தான் காரணம் என்று நினைத்துவிட்டான் போலும்.

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

  எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்),  நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன? "அறத்தான் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர்  சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான்.  இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மறைந்த பிறக

எரிமருள்

  இ ந்த பூத்தவேங்கையின் உள்ளிருந்து ஓசையற்ற காலடிகளுடன், கூர்ந்த மூக்குடன், விழித்த கண்களுடன், மெல்லமடிந்த சிறிய காதுகளுடன் உன்னை நோக்கி வருகிறேன். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எனச் சில ஒவ்வொருவருக்கும் இருக்கும். சாமனியனிம் அந்த தருணம் மறக்கப்பட்டுவிடுகிறது, ஆனால் கலைஞனுக்கு அது உச்ச தருணாமாகிறது. "முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்".  கவித்துவமான கதை. மெளனி அவர்களின் கதை போன்றது. இந்த கதையின் வாசல் எனக்கு இன்னும் திறக்கவில்லை. மறுவாசிப்புக்கு சில காலம் கழித்து உட்ப்படுத்தினால் திறக்கலாம். இதே போன்ற ஆசிரியரின் மற்ற கதைகள் படித்தால், நிச்சயம் விளங்கும்.  வருங்காலங்களில் மீண்டும் குறிப்பு எழுத வேண்டும்.