Skip to main content

Posts

Showing posts from January, 2016

அத்துவான வெளியில் தொங்கும் தமிழன்

கலாசாராம், பண்பாடு, மொழி, என் கல்வி இவைகள் எல்லாம் எதற்க்கு? ஏன் இது இல்லை என்றால் என்ன? நாம் ஏன் அமெரிக்ககாரனை போலும், ஜெர்மன்காரனை போலும் வாழக்கூடாது? இதைப் பற்றி நான் யோசிக்கும் பொழுது எனக்கு எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது. இது ஒரு ஜென் கதை. மிகவும் வயதான தாத்தா ஒருவர் ஜென் குருவை பார்க்க வந்திருந்தார். அவருக்கு பார்வையில்லை. ஜென் குருவுடன் பேசிமுடித்ததும், தான் கிளம்பவேண்டும் என்றார். அன்று அம்மாவாசை. கும்மிருட்டு. நேராமாகிவிட்டது, இன்று வேண்டும் நாளை காலை போகலாமே என்றார் குரு. இல்லை உடனே போயாகவேண்டும் என்றார் தாத்தா. சரி இந்த விளக்கை கையிலேடுதுக்கொண்டு கிளம்புங்கள் என்று குரு சொன்னதற்க்கு, எனக்கோ கண் தெரியாது இந்த விளக்கை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்றார். உங்களுக்கு வேண்டுமானால் கண் தெரியாமல் இருக்கலாம் ஆனால் எதிரிலே வருபவர்களுக்கு தெரியுமல்லாவா என்றதும், தாத்தா விளக்கை வாங்கிக்கொண்டு நடக்கத்தொடங்கினார். கொஞ்ச தூரம் கடந்து வந்ததும், யாரோ ஒருவர் அந்த தாத்தா மேல் மோதிவிட்டார். ஏ உனக்கு கண் தெரியாதா? விளக்கு வச்சுட்