கலாசாராம்,
பண்பாடு, மொழி, என் கல்வி இவைகள் எல்லாம் எதற்க்கு? ஏன் இது இல்லை என்றால் என்ன? நாம்
ஏன் அமெரிக்ககாரனை போலும், ஜெர்மன்காரனை போலும் வாழக்கூடாது? இதைப் பற்றி நான் யோசிக்கும்
பொழுது எனக்கு எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் சொன்ன கதைதான் நினைவுக்கு வருகிறது.
இது ஒரு ஜென் கதை.
மிகவும் வயதான
தாத்தா ஒருவர் ஜென் குருவை பார்க்க வந்திருந்தார். அவருக்கு பார்வையில்லை. ஜென் குருவுடன்
பேசிமுடித்ததும், தான் கிளம்பவேண்டும் என்றார். அன்று அம்மாவாசை. கும்மிருட்டு.
நேராமாகிவிட்டது,
இன்று வேண்டும் நாளை காலை போகலாமே என்றார் குரு.
இல்லை உடனே
போயாகவேண்டும் என்றார் தாத்தா.
சரி இந்த
விளக்கை கையிலேடுதுக்கொண்டு கிளம்புங்கள் என்று குரு சொன்னதற்க்கு, எனக்கோ கண் தெரியாது
இந்த விளக்கை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்றார்.
உங்களுக்கு
வேண்டுமானால் கண் தெரியாமல் இருக்கலாம் ஆனால் எதிரிலே வருபவர்களுக்கு தெரியுமல்லாவா
என்றதும், தாத்தா விளக்கை வாங்கிக்கொண்டு நடக்கத்தொடங்கினார்.
கொஞ்ச தூரம்
கடந்து வந்ததும், யாரோ ஒருவர் அந்த தாத்தா மேல் மோதிவிட்டார்.
ஏ உனக்கு
கண் தெரியாதா? விளக்கு வச்சுட்டுவந்தும் இப்படி மேல விழகிறயே? எரிச்சலோடு தாத்தா கேட்டார்.
அய்யா உங்க
விளக்கு அணைஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு என்றார் வந்தவர்.
அந்த விளக்குதான்
நம்ம பண்பாடு, கலாச்சாரம் எல்லாம். நமக்கே
தெரியாமல் நமக்கு வழி காட்டிக்கொண்டிருக்கிறது. அது நம் வாழ்வுக்குள் ஒழிந்திருக்கிறது.
பெரும்பாலும்
நம் மக்கள் மேலை நாட்டினரை போலவே வாழ ஆசைகொள்கிறோம். அவர்கள் வாழ்க்கை பாணி என்பது,
ஐந்து நாட்க்கள் அயாராது உழைப்பார்கள், ஆறாவது நாள் சம்பாதித்தையேல்லாம் செலவு செய்வார்கள்,
ஏழாவது நாள் கடவுளிடம் மன்றாடிவிட்டு திரும்பவும் வார வாழ்க்கைச் சக்கரத்துக்குள் தொடர்வார்கள்.
ஆனால் நம்மவர்கள் வாழ்க்கை முறையே வேறு. மகிழ்ச்சிக்கு
ஒரு நாளும், துக்கத்திற்க்கு மறு நாளும் கிடையாது. மனிதனின் இயல்பே மகிழ்ச்சிதானே.
நம்ம ஊரில் பண்டிகையில்லாத நாள் என்று ஒன்று உண்டா? நம்மில் பல பேருக்கு பொங்களை எப்படி
கொண்டாடுவது, தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்றே தெரியாது, அதன் பின்னால் ஒரு வாழ்க்கைத்
தொடர் சங்கிலி உள்ளது. நம் பாரம்பரிய கரகாட்டமும், ஒயிலாட்டமும் காணமல் போனது இதற்க்கான
ஒரு நல்ல சான்று. சுருங்க சொல்ல வேண்டுமேன்றால் இலவு வீட்டில் ஒப்பாரி வைப்பார்கள்
இது மாதிரி வேறேந்த சமூகத்திலும் கிடையாது,
பிணத்தை தூக்கிகொண்டு சுடுகாடு போகும் போது போடும் ஆட்டமும் வேறேங்கும் இல்லை. அழுகையும்
ஆட்டமும் கலந்ததுதான் வாழ்க்கை, ஒன்றை தனியாக பிரித்து மற்றோன்றை பார்க்க முடியாது.
இதுதான் வாழ்க்கை தத்துவம், நம் பண்பாடு.
எனவே நம்
சமூகம் நமக்கான பண்பாட்டை விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் கல்வி கற்றவர்கள் என்று
சொல்லிக்கொள்ளும் நாம், நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் அதனை விட்டு விலகி போகிறோம். ஏன் விலகி
போகிறோம்? நமக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு முழுமையான கல்வி அல்ல என்பதுதான் உண்மை.
எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் சொன்னது போல இது கல்வி இல்லை, ஒரு பயிற்ச்சி. எப்படி
ஒரு தொழிற்ச்சாலையில் வேலை பார்ப்பது என்ற ஒரு பயிற்ச்சி அதைத் தாண்டி அதற்க்கு அர்த்தம்
இல்லை. அதனால் தான் நம்மில் பல பேருக்கு எந்த ஆட்சி சரி தவறு என்று தெரியவில்லை. கடைசியில்
வாக்களிக்காமல் வீட்டிலிருந்துகொண்டு தொலைக்காட்சி விமர்சனத்தையும் வேறு யாரோ சொன்னதையும்
வைத்துக்கொண்டு முகநூலில் விமர்சனம் செய்வதும், பகிர்வதும் நம் வழக்கமாக ஆயிற்று. ஒரு
மஞ்சுவிரட்டு வேண்டுமா? இல்லையா? என்று எவறும் தன் சுய அறிவிலிருந்து பேசுவதுயில்லை.
அப்படி ஒன்று இங்கு குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். இந்த கலாச்சாரத்தை பற்றியோ
அல்லது பண்பாட்டைப் பற்றியோ செவிவழிமூலம் யாரோ ஒருவர் சொன்ன அறைகுறை தவறான தகவலுடன்
அலைவதும் அதன் காரணமாக நம்மை நாமே தரைகுறைவாக எண்ணிக்கொள்வதும் தான் கற்றவர்கள்ளாகிய
நாம் செய்வது. இருப்பதிலே மோசமான வேலை என்னவேன்றால் இதுதான். அப்படியேன்றால் இவ்வளவு
பேர் படித்து என்ன பயன்? கல்வி என்பது ஒருவனை முழுமையாக்க வேண்டும். ஆனால் நமக்கு இருப்பது
அறைகுறை அறிவு.
ஒருமுறை பட்டம்பெற்ற
ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், “ ஏங்க தமிழ், தமிழ்னு கட்டிக்கிட்டு அழறீங்களே மொழிங்கறது
ஒரு தொடர்புக்காக தானே. அது எந்த மொழியாயிருந்தா என்ன?
நான்கு எழுத்து
கெட்ட வார்த்தை ஒன்றை ஆங்கிலத்தில் சொல்லி, இதை தமிழ்லில் சொல்லுங்க என்றேன்.
அசடு வழிந்தார்,
அவர் வாய் அந்த வார்த்தையை சொல்ல கூசியது. உடனே சொன்னேன். பார்த்தீர்களா உங்களால் சொல்ல
முடியவில்லை. காரணம் என்ன தெரியுமா? என்றேன்.
அவர் என்ன
என்பதைப் போல தலை அசைத்தார்.
நீங்கள் ஒரு
பண்பட்ட, உயர்ந்த சமூகத்திலிருந்து வந்தவர் அதனால் தான் உங்களால் பொதுவெளிகளில் அந்த
வார்த்தையை பேசமுடியவில்லை. தமிழில் யாரும் பொதுவெளில் அப்படி பேசிக்கொள்ளமாண்டார்கள்.
இப்போது தமிழ் மறைமுகமாக என் பண்பாட்டையல்லவா கூறுகிறது.
சிலர் சொல்வாற்கள்,
நான் பேசுவேனே? ஏன் குழாய் சண்டையில் பேசுகிறார்களே?
ஆமாம் ஒத்துக்கொள்கிறேன். அதே போல் எப்போதும் சில விதிவிலக்குகள் இருக்கும் என்பதையும்
நீங்கள் ஒத்துக்கொள்ளுங்கள்.
அப்படியானால்
இந்த பண்பாடு எதற்க்கு? நீ மேலை நாடுகளிலிருந்து வேறுபட்டவன், என்பதை இந்த கலாச்சாரமும்,
பண்பாடும் தான் சொல்கிறது. நீ எதுவும் புதிதாக சாதிக்க வேண்டுமென்றால் உன் சமூக கலாச்சாரம்,
பண்பாடு என்னும் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட கண்டுபிடிப்பாய் இருந்தால்தான் அது
சாதனை ஆகும் இல்லை என்றால் அது மேலை நாட்டிக்காரன் கண்ட அதே கண்டுபிடிப்பாய்தான் இருக்கும்.
வேண்டுமென்றால் இப்ப்டிக்கொள்ளலாம், என்னதான்
செய்தாலும் அவன் செய்து வைத்தவற்றில் செய்யும் மாறுதலாகவே இருக்குமே ஒழிய அது ஒரு மாற்றாக
இருக்காது.
அவன் கண்டுடித்தது எல்லாம் அவனுடைய சமூகத்திற்க்கானது.
ஆனால் நம் சமூகத்திற்க்கு என்று இன்னும் நாம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஏன் தெரியுமா?
நமக்குதான் நம் சமூகத்தைப் பற்றி எதுவுமே தெரியாதே. அதனால் தான் நாம் இன்னும் எதையும்
பெரிதாக சாதிக்கவில்லை. அத்துவான வெளியில் நம் கால்கள் பண்பாடு என்ற தரையில்லாமல் மிதந்துகொண்டிருக்கிறோம்.
நாம் தமிழர்கள்.
Comments
Post a Comment