Skip to main content

Posts

Showing posts from March, 2016

கற்பனைக்கும் நிஜத்திற்க்குமான ஊசலாட்டம் - ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு

ஜெவை சந்தித்தால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். அவரை கண்டதும் கண்கள் கலங்கிவிட்டது, ஒருவித வெறுமை உணர்வுக்கு ஆளானோம். உடனே நாங்கள் ஒரு தீர்மானத்திற்க்கு வந்தோம். யார்யாரையேல்லாம் கொண்டாடுகிறோமோ அவர்களை சந்திப்பது என்று. அந்த வரிசையில் முதலில் ஜெ இருந்தார். அதை நண்பர்களும் சத்தியமாக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.  நண்பர்களே! என அழைப்பது இல்லை இல்லை வரவேற்ப்பதும், அல்ல என மறுதளிப்பதும்மென ஜெவின் பேச்சுக்கள் மனதிலே ஓடியது. கிரியை நான் ஜெ என்றே ஊகித்ததும், அவருக்கு ஒரு பிம்பத்தை என்னுள்ளே தந்திருந்தது. இரயிலிலிருந்து அவசரமாய் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்க்கு நுழையும் போது ஜெவின் குர

பூங்காவனம்

நா பார்க்குக்கு போய்டுவர்ர .. பதிலை எதிர்பாராமல் நிதானமாக நடக்க தொடங்கினேன் . கையிலி கட்டி பழக்கப்பட்டு இப்போது வெள்ளை வேட்டி கட்ட சிரமமாக இருக்கிறது . முக்கியமாக மடித்துக் கட்டினால் ஒருவேளை மானம் போகுமோ என்று பயந்து தூக்கிபிடித்துக்கொண்டே நடந்தேன் . பூங்கா .. மனதுக்குள் அந்த சொல் சட்டென முளைத்தது . ஏ வந்துச்சு அந்த சொல்லு ? தெரியல . பூங்காவனம்ங்கர சொல்லைதான பூங்கானு ஆக்கினாங்கலா ? வாழையிலை கண்ணில் பட்டு சட்டென சுயநினைவுக்கு வந்தேன் . பிரபலங்களை பார்க்க மக்கள் வழி நெடுகிலும் முண்டியடுத்து எட்டி விழுந்து பார்ப்பதைப் போல மரங்கள் அந்த சாலையின் இருமறுகிலும் கம்பி வேலியைத்தாண்டி வெளியே எட்டிப் பார்த்தது . கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ராஜாவாய் அவற்றைப் பார்த்த வண்ணம் சென்றேன் . கொய்யா மரம் நல்லா வளந்திருக்கு ஆனா மாங்கா மரத்துல சரியா பிஞ்சு பிடிக்கல . இளனிக்கடைக்காரார் அழுக்கு கையிலி வேட்டியோடு பார்க் வாசலில் வந்து நின்றிருந்தார் . காலையில வாங்கியதற்க்காக லேசான புன்னகையை வெட்டினார் . பூங்கா பிறந்த தேதி , யாரு திறந்து வைச்சாங்க எல்லாத்தையும் சுவத்தில எழுதிவச்சிருந்தாங்க , ஏனோ அதைப் பார்க்க