முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி, புல்லிய நெய்தல்தன்னைப் பெரு அரு மருதம் ஆக்கி, எல்லையில் பொருள்கள் எல்லாம் இடை தடுமாறும் நீரால், செல்லுறு கதியின் செல்லும்வினை என, சென்றது அன்றே . முல்லை நிலத்தை குறிஞ்சி நிலமாக்கியும்; மருத நிலத்தை முல்லை நிலமாகச் செய்தும்; புன்புலமாகிய நெய்தல் நிலத்தை; நிகரில்லாத மருத நிலமாகச் செய்தும்; (பல்வேறு நிலங்களின்) அளவற்ற பண்டங்களை யெல்லாம்; தத்தம் இடத்தை விட்டு வேறு நிலத்துக்குக் கொண்டு செல்லும் தன்மையால்; செலுத்தப்படுகின்ற போக்கிலே இழுத்துப் போகின்ற; இரு வினைகள் போல (அந்த வெள்ளம்) சென்றது. பொதுவாக கவிதைகளை அல்லது இலக்கியங்களை படிக்கும் போது, அவற்றை சுருக்கக்கூடாது. அவைகள் வெடிகுண்டைப் போல. விழுந்ததும் வெடித்து சிதறி பெருக வேண்டும். தொடர்ந்து கவிதைகளைப் பற்றி சிந்திப்பதால் அது சாத்தியப்படும். நாம் செயய்யும் செயலால் தொடர்ந்து நம் நிலைகள் உயர்ந்து தெய்வ நிலையை அடையலாம் அல்லது நேர்மாறாகவும் நடக்கலாம். அது நம் செயலைப் பொறுத்தது. இங்கு நதியை வினையோடு பொறுத்தியது மிக அற்ப்புதம். குறிஞ்சியோ, மு
எழுதுதல் ஒருவகை அறிதல் முறை, அதனால் எழுதுகிறேன்.