Skip to main content

Posts

Showing posts from May, 2016

சிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்

தேதி: 05.06.2016 நாள்: ஞாயிறு இடம்: கேம்ப் ரோடு. நிகழ்ச்சி நிரல் பகுதி 1: அறிமுகம் அ.கதை சொல்லுவது ஏன் முக்கியம்? ஆ.இலக்கியம் என்றால் என்ன? இ. மரபுக் கவிதை ஒரு விவாதம் ஈ. சிலப்பதிகாரம் ஓர் அறிமுகம். உ.விவாதம் பகுதி 2: புகார் காண்டம் பகுதி 3 :மதுரைக் காண்டம் பகுதி 4 : வஞ்சிக் காண்டம் பகுதி 5 : இறுதி விவாதம். நேரத்தை சரியாக வரையறுக்கமுடியவில்லை. அதிகபட்சமாக 5 மணி நேரம்.

கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.

கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன். கதை: சிலப்பதிகாரம்.                                இடம்: சென்னை நாள்: இன்னும்  முடிவாகவில்லை. பின்குறிப்பு:   சங்ககால இலக்கியத்தை, இக்காலத்திற்க்கு ஏற்ப்ப கூறும் முறையை தேர்வு செய்து உள்ளேன். பங்குகொள்ள விரும்புவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும், அதனை பொருத்து நிகழ்வினை உறுதி செய்யலாம். ஏன் கதை சொல்லுதல் முக்கியமாகிறது? கதை என்பது வெறும் கற்ப்பனை மட்டுமே என நினைப்பது தவறான எண்ணம். நம் வரலாறு, கலாச்சாரம் எல்லாவற்றையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பயன்பட்ட கருவி கதை. சற்றே யோசித்தால் ஒரு விசயம் தெளிவாக விளங்கும், நம் பெற்றேருக்கு தெரிந்த அளவுக்கு நமக்கு நம் மண்ணைப் பற்றி தெரியாது. இன்னும் சொல்லப்போனால் மாபெரும் காப்பியங்களான இராமயாணமும், மகாபாரதமும் எழுத்தறிவில்லாத எத்தனையோ பெற்றோர்களுக்கு அத்துப்படி. எப்படி இதுவெல்லாம் சாத்தியமாயிற்று? கதை கேட்டலும், அதை சொல்லுதலும் தான் சாத்தியமாக்கியது. அப்படியானால் வரலாறு, கலாச்சாரம் ஏன் முக்கியமாகிறது? எந்த மனித சமூகமும் தனக்கென ஒரு வரலாறு, அதற்க்கான காலாச்

திரி

திரி கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தால், வண்ண ஓவியங்களாய் மலர்வாள் ஆனால் வெடிச்சத்தம் மட்டும் உள்ளேதான். வெடிக்காவிடில், எப்படியும் கொஞ்ச நேரத்தில் நடக்கும். காதல் திரி கொழுத்தப்பட்ட பட்டாசு.