கதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.
கதை: சிலப்பதிகாரம். இடம்: சென்னை
நாள்: இன்னும் முடிவாகவில்லை.
பின்குறிப்பு: சங்ககால இலக்கியத்தை, இக்காலத்திற்க்கு ஏற்ப்ப கூறும் முறையை தேர்வு செய்து உள்ளேன்.
பங்குகொள்ள விரும்புவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும், அதனை பொருத்து நிகழ்வினை உறுதி செய்யலாம்.
ஏன் கதை சொல்லுதல் முக்கியமாகிறது?
கதை என்பது வெறும் கற்ப்பனை மட்டுமே என நினைப்பது தவறான எண்ணம். நம் வரலாறு, கலாச்சாரம் எல்லாவற்றையும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பயன்பட்ட கருவி கதை.
சற்றே யோசித்தால் ஒரு விசயம் தெளிவாக விளங்கும், நம் பெற்றேருக்கு தெரிந்த அளவுக்கு நமக்கு நம் மண்ணைப் பற்றி தெரியாது. இன்னும் சொல்லப்போனால் மாபெரும் காப்பியங்களான இராமயாணமும், மகாபாரதமும் எழுத்தறிவில்லாத எத்தனையோ பெற்றோர்களுக்கு அத்துப்படி. எப்படி இதுவெல்லாம் சாத்தியமாயிற்று? கதை கேட்டலும், அதை சொல்லுதலும் தான் சாத்தியமாக்கியது.
அப்படியானால் வரலாறு, கலாச்சாரம் ஏன் முக்கியமாகிறது?
எந்த மனித சமூகமும் தனக்கென ஒரு வரலாறு, அதற்க்கான காலாச்சாரத்தையும் கொண்டிருக்கிறது. இது ஒன்றும் நேற்றோ முந்தையநாளோ வந்தது இல்லை. தலைமுறை தலைமுறையாக இது தொடர்ந்து வருகிற ஒன்று. அப்படியானால் ஒரு சமூகம் இதை மறந்தால் என்ன? இத்தனை நாளாக அவர் முன்னோர்கள் திரட்டி வந்த அறிவு, தனித்தன்மை அனைத்தும் அத்தோடு அழிந்து போகும். பின்னர் நாம் எந்தவித பிடிப்பும் இல்லாத தனிச்சமூகமாக நிற்க்க வேண்டிவரும். தனக்கான எந்தவித சொந்த படைப்பையும் உருவாக்க முடியாத நிலைவரும். தனித்தன்மை என்பது முக முக்கியமான ஒன்று.
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்பது சங்க்காலப் பாடல்.
என்னதான் சொல்லவருகிறது?
எல்லா நல்ல கேட்டுக்குங்க, உலகத்துல இருக்கிற ஊர் எல்லாம் என்னோட ஊர் தான்.
அப்படீனா?
உலகத்திலுள்ள எல்லோரும் சம்மானவர்கள் அதனால் எல்லா ஊரும் எனது ஊர் ஆகிறது. இந்த கருத்து சுமார் மூன்று ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் சொன்னது. இதை இன்னும் மேலை நாடுகளால் உதட்டளவில் மட்டும் ஒத்துப்போக முடிகிற காரியம், ஆனால் மனதளவில் முடியவில்லை. இருந்தும் நம் கலாச்சாரம், எந்த மண்ணில் எல்லாம் மற்ற மதத்தவர்களுக்கு இடமில்லை என்று அனுப்பியபோதும், இந்தியா மட்டும் இடம் தந்தது வரலாறு.
இந்தியா வல்லராசாக போகிற காலம் நெருங்கிவருகிற சூழல். அதனால் நம் காலச்சாரத்தைப் பற்றிய பிரஞ்ஞை முக்கியமாகிறது. தெரிந்துகொண்டால் தான் நாம் தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கமுடியும். புதுவிதமான மாற்றத்தை இந்த உலகத்துக்கு தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் வெள்ளைக்காரனை காப்பி அடித்தது போதும்.
Comments
Post a Comment