Skip to main content

Posts

Showing posts from August, 2016

அவள் வருகைக்கு நன்றி

என்னுள்ளே இரவுகள் விடிவின்றி தவித்தது. முழுநிலவு வருமென்று நினைத்தது பகடியானது. வெண்மையும், நீலமுமாய் சேலை அணிந்து கொள்ளும் வானமொரு வஞ்சகன், கயவன். எப்போதும் நிலவை தான் மட்டும் சொந்தம் கொண்டாட வேண்டுமென்கிறான். கட்டுப்பாடுகள் சுக்குநூறானது. சந்தனத்தை பாலில் உறைத்த வெண்மை என் மனதில் நிகழ்கிறது. அய்யோ! பொங்கிவிடுமோ? வானம் பொறமைப்படுகிறது. படட்டும், எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கும். உச்சத்தில் மனம் தன்னை மறந்து ஆனந்தத்தில் கூத்தாடுகிறது. நொடிப்பொழுதில் நிகழ்ந்த மாயம். இல்லை இல்லை. அது உண்மை. மந்திரத்திலேல்லாம் நம்பிக்கையில்லை. ஒருவேளை அதனால் நடந்திருக்கும், நிகழாமலூம் போயிருக்கும். அவள் வருகைக்கு நன்றி.

இரண்டு பேரிச்சம்பழம்

எல்லோரும் நகைக்கிறார்கள். என் கையில் இரண்டு பேரிச்சம்பழம் இருக்கிறதாம். அதை திருப்பக்கொடுத்தால், லட்சியத்தை மீட்டுவிடலாமா?

நாகரிகமானவன்

நான் நாகரிகமானவன். ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன். பக்கத்து வீட்டுப் பெண் கற்ப்பழிக்கப்பட்டாலூம், கவலையில்லை. நான் ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.

நாகரிகமானவன்

நான் நாகரிகமானவன். ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன். பக்கத்து வீட்டுப் பெண் கற்ப்பழிக்கப்பட்டாலூம், கவலையில்லை. நான் ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.

கடவுள்

எக்காலத்தும் விளங்காத கேள்வி இது கடவுள் இருக்காரா? ஆமாம். கிணத்து மேட்டில் கிடக்கிறார். வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்களாம்.