Skip to main content

Posts

Showing posts from September, 2016

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

நான் என்ன செய்யட்டும்?

பஸ் சாவுகாசமாய் நின்றுகொண்டிருந்தது. முன்படியிலிருந்து நான்காவது சன்னலோர சீட் கிடைத்த மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தேன். எனக்கு இடதுபக்க வரிசையிலிருந்த சீட்டின் முதுகு உடைந்து கூனிப்போயிருந்தது. மழை பஸ் முழுவதையும் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தியது. கண்ணாடி ஜன்னலை மேலே தூக்கிவிடும் ஸ்டைல் எனக்கு ஏனோ பிடிக்காது. வேறு வழியில்லாமல் ஜன்னலை மேலே தூக்கி அதன் லாக்கை விடுவித்தேன். ஒரு புறம் மட்டும்தான் லாக் நின்றது. காற்று மெதுவாக என் சட்டைக்குள் புகுந்து குளிர் ஊட்டியது.  அனுமதிக்கிறவரை காத்திருக்கிற நாகரிகம் அதற்க்கு  தெரிந்திருக்கிறது போல, சட்டென எனக்குள் சிரித்துக்கொண்டேன். வயதான தாத்தா, இளம் தம்பதி, குழந்தையோடு ஒரு பெண், சிறுவன் என வரிசையாய் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தனர். சர சர வென சத்தம் கேட்டு தலையை திருப்பி வெளியே பார்த்தேன். இந்த காற்று மரங்களை ஆட்டி அதன் இலைகளை தற்க்கொலை செய்ய வைத்தது. அடுத்த கணம் விழுகின்ற  இலைகளை தாங்கி, தொட்டிலாட்டி தரையில் தள்ளியது. கிழிருந்து எழுந்து மலருக்குள் போய் உட்கார்ந்து மலர்படுக்கையில் துயில்கலைந்து, என் நாசியில் புகுந்து, நான் ஆன பிறகு பிரிந்து வேறானது. பண்டம