Skip to main content

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?
 சில சமயம் அவளது நான்கு முடியை ஆட்டி என் மேல் மோத வைக்கும், அவள் விலக்கிவிடுவாள். சுற்றிக்கொண்டு போய் துப்பட்டாவை தூக்கி அடிக்கும், இழுத்துவிடுவாள். சட்டென ஓடிவிடும். எதிர்பாரத நேரத்தில் முடிகள் அனைத்தையும் வாரி என் மேல் வீசும். கருந்திரை இருவரது முகத்தையும் மூடிவிட்டது. பையாஸ்கோப்பில் புகைப்படத்தை சின்ன வயதில் பார்ப்பது போலயிருந்தது, சிகையினுடே அவளது முகம். வெட்க்கத்தில் விளைந்த புன்னகை அவளது இதழ்களில் பரவியது. மனதுக்குள்ளே அந்த புன்னகை அமர்ந்துகொண்டு, என் மனதை தொண்டி தொண்டி மகிழ்ச்சியை எடுத்துக்கொண்டு இருந்தது. எங்கிருந்து வந்தது இவ்வளவு மகிழ்ச்சி? என்னுள்ளே தூங்கிக்கிடந்திருக்குமோ? சிகையை இரு கரங்களால் வளைத்து அவள் தலையின் பின் சேர்தேன். காது மடலுக்குள் அந்த நான்கு முடியை சொறுகிவிடுவதில் அவளுக்கு என்ன சந்தோஹம் என்று தெரியவில்லை? கொஞ்ச நேரம் அவளது தலையை பிடித்துக்கொண்டு மயாஜாலம் காட்டும் கண்களின் இரகசியத்தை கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தேன். ம்கூம்….நிரபராதி போல அந்த கண்கள் நடித்தது. முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் அது உண்மையில்லை. ஒவ்வொறு முறையும் ஆராய முயலும் போது, எனது இருப்பை மறந்து தொலைந்து போவேன். பிறகுதான் தொலைந்து போனதன் நினைவே வரும். நீதிமன்றத்தில் உண்மை தெரிந்த இருவர் எதிர் எதிர் கூண்டில் நிற்க்கும் போது, உண்மை வாதடப்படும். ஆராயப்படும். நான் நீதிபதி ஆகும் போதெல்லாம் உண்மை மறந்துபோகிறது. சாட்சிக் கூண்டுக்குள் வந்தால் தெரிகிறது. அசையும் கற்ப்பாறை அவள் தலைக்கு மேல் தெரிந்தது.
அங்க பாரு யானைக் கூட்டம், என்றேன்.
அவள் தலையை திருப்பி, மலைக்கு மேலே நின்ற கூட்டத்தை பார்த்தாள். சில யானை மரங்களை உடைத்துப் போட்டது. கைகளை நீட்டி ஆமாம்.ஆமாம் என்றாள்.
இருளேனும் கற்ப்பப்பை பூமியை தினந்தோறும் காலை வேளையில் செனிக்க வைக்கிறது. மலையிலிருந்து சூரியன் தற்க்கொலை செய்வது போல தோன்றிற்று. கற்ப்பப்பை மலையிலிருக்கும் ஒவ்வொரு மரமாய் விழுங்கிகொண்டு போனது. கடைசியாய் நாங்களிருந்த கெஸ்ட் கவுஸ்சும், திருப்பிப் பார்ப்பதற்க்குள் மலை முழுவதும் அதனுள். மிக விரைவாக இருட்டிவிட்டது.
கார்த்திக் என்று அழைத்துக்கொண்டே என் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்.
காற்று என் மீது இருக்கும் போது எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ம்.. என்றேன். ஒரு வித சங்கிதமாய் அந்த இரவில் கேட்டது.
நா ரொம்ப சந்தோஹமா இருக்கேன் என்றாள்.
அவள் தோள் மேல் கை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிக்கும் போது இந்த கேள்வியைக் கேட்டாள். எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. நானும் ரொம்ப சந்தோஹமாதா இருக்கேன் என்றேன் பதிலுக்கு.
நிலவு மெதுவாக ஊர்ந்துகொண்டு வந்தது. வானம் மேகத்தை போர்வையை போல அடிக்கடி இழுத்துப் போர்த்திக்கொண்டுவிட்டது. நல்ல குளிர ஆரம்பித்திருந்தது. இரவு பூச்சிகள் பாட தொடங்கியது.    
நாம இந்த உலகத்தை விட்டு எங்கோ வெகு தொலைவில் இருக்கறமாதிரியும், நீயும் நானும் மட்டும் தனியா இருக்கறமாதிரியும் தோணுது. என்னால சந்தோஹத்த தாங்கிக்க முடியல. அவள் கண்களின் ஓரம் லேசாக கண்ணீர் வழிந்தது.
திடுமென போன் பண்ணி, நாம எங்கோயவாது போலாம் என்றாள். சரி மாயாஜால் போலாம் என்றேன்.
இல்லைபா.. எங்கயாவது ஒரு மூனு நாள், நாலு நாள் போலாம். மனசு சரியில்லனா. சுந்தர்தா மேகமலைய பத்தி சொன்னான். வழியேல்லாம் மோசம். ஓருவழியா வந்து சேர்ந்ததுக்கு அப்புறம்தான் தெரிந்தது ஓட்டலே இல்லைனு. எப்படியோ இங்க இடம் கிடச்சுச்சு. ஆபிஸ்க்காக முன்னாடி சின்ன பில்டிங், அதுக்கு பின்னாடி இரண்டு மாடில கெஸ்ட் கவுஸ். நாங்க தங்கின ஒரு ரூம தவிர மீதியெல்லாம் காலியாத கிடந்துச்சு.
ஆற்றில் அடித்த பொருளைப் போல துப்பட்டாவை காற்று அடித்து தூக்கி தரையில் வீசியது. அவள் அதைப் பற்றி கவலை அற்றிருந்தாள்.
கைகளை வளைத்து அவள் கழுத்தை சுற்றிக்கொண்டேன். நான்கு முடியை இந்த முறை நான் விலக்கி, அவள் காதறுகே இரகசியம் சொன்னேன். நீ தேவதை, இந்த மலைகளுக்கும், காற்றுக்கும், மரங்களுக்கும், ஏன் இந்த காட்டுக்கே.
அவ்வளவுதானா? என்றாள்.
எனக்கும்.
அவள் சிரித்தாள். முத்தமிட என் உதடுகள் குவிந்ததும், அவள் உதடுகள் அன்னிச்சையாய் விலகிக்கொள்ள சற்று ஏமாற்றம் மிஞ்சியது.
நிலவு பலாயிரம் ஆண்டுகள் பூமியின் மீது தன் காமகதிர்களைப் பொழிந்தும் குறைந்திடாது என் மேலும், அவள் மேலும் வீசியது. அதன் ஒளி ஒருவித மயக்குவதாய், குளிர்ந்து கிளர்ச்சியுட்டுவதாய் இருந்தது.  வெண்ணிலவு வானத்தில் அக்கினி குண்டமாக எறிய , அவள் கைகள் என்னுடன் கூட, நடந்துகொண்டிருந்தோம் அந்த மலையின் கண்களைச் சுற்றி. வெண்மலர்களால் வானத்து தேவர்கள் ஆசிர்வாதம் செய்தனர். மரங்களிலிருந்து எழும் காற்று மத்தளமாய் முழங்கிற்று. இரவு பூச்சிகள் வாழ்த்தொழிகள் பாட எங்கள் காதல் நிகழ்ந்துகொண்டிருந்தது.
சிரமப்பட்டு ஏறி சிறுமலை மேல் அமர்ந்தோம். எதிரே அசிங்கமாக குறைப்பிரசவத்தில் பிறந்ததுபோல கெஸ்ட் கவுஸ் தெரிந்தது. அதற்க்கு பின்னால் உயர்ந்த மலையில்  கருமையின் நிறம் துயிலுறங்கியது. என்றாலும் நிலவு வெளிச்சத்தில் மரங்கள் தெரிந்தன. மலை உச்சியிலிருந்து பெரிய கற்ப்பாறை உருண்டு வருவதுபோல யானைக்கூட்டம் நடந்துவந்தது. இருவரும் பேசிக்கொள்ளவில்லை, காட்டைப்பார்த்தவாறு உட்காந்திருந்தோம்.
மலையுச்சியில் மேகங்கள் மரங்களைத் தழுவதுபோல அவள் என் அருகில் தொட்டும், தொடாமலும் அமர்ந்திருக்கிறாள். வற்றாத சுனை நீர் சுரந்து, மலையின் கண்களில் நிறைந்து பிறகு ஆனந்தக் கண்ணீராய் மலைச்சரிவுகளில் ஓடை ஓடியது. அதுபோலவே என் ஆராக்காமமும் இவளாலே வற்றாது சுரக்கிறது. மேகம் மரத்தின் தழுவுளால் கசிந்துருகி மழையானலூம், மனமாறி மேகமாகவே நின்றுகொள்ளும். அவளும் முத்தங்களை பொழிந்துவிட்டு சட்டென நிறுத்திக்கொள்வாள் காரணமின்றி. மனம் கிடந்து தவிக்கும். காற்றைப்போல பாய்ந்து மலையிலிருந்து கீழே விழும் அடுத்த கணம் கூச்சலோடு மேல் எழும்.
பனிமிகுந்து வானத்தையும் மலையையும் இடைவெளியில்லாமல் நிரப்பியவாறு, எனக்கும் அவளுக்குமான இடைவெளி உடலென்னும் பருப்பொருளாள் நிரம்பியுள்ளது. ஓருயிராய் ஆக துடிக்கும் காமம், தோற்று இரண்டு உடலானது. இரவிலே கலந்த நிலவொளி வீரியம் குறைந்து ஒளிர்கிறது. காமவிதை உடலுக்குள்ளே விதைக்கப்பட்டிருக்குமா என்ன? உடைத்துக்கொண்டு வெளியேறவே பார்க்கிறது. மரம், செடி, கொடி, புல் எல்லாம் மலையின் காமம். வளர்ந்து வானத்தை தழுவப் பார்க்கிறது. நாகரிகம் என்று சொல்லி அதை வெட்டி, வீடாக்குகிறார்கள் இந்த அற்ப்ப மனிதர்கள். வண்டினங்கள் தேவதூதுவர்கள், மலையிலே வந்திறங்கி தெய்வகாரியங்கள் செய்கிறது. மேகங்கள் உயரமான மரங்களை மட்டும்தான் தழுவிச் செல்கிறது, மற்றவற்றை தவிப்பிலே தள்ளுகிறது.
நெருப்பேன உடல் எறிய, அருகினில் காமக் குளிர்காயும் அவள். உடைந்து போன மாதுளை இதழ்களால் என் கன்னங்கள் சிவக்க முத்தங்கள் கொட்ட,  வேள்வியில் இட்ட நெய் போல அது காமத்தீயை அணையாது வளர்த்தது. மலையின் கண் இமைக்காது எங்கள் இருவரையும் பார்த்தது. அவளும் நானும் மங்கிய ஒளிக்குள் ஒருவர் மற்றவருக்குள் ஒடுங்கிப்போக முயன்றுகொண்டிருந்தோம். சில் நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழுந்தது, இருவரையும் கண்டு நிலவு காமமுற்று துணை தேடி நகர தொடங்கியது. காமம் வழிந்தோடி ஓடையாகி, காடெல்லாம் நிறைந்து, ஆறாகி பின் கடலில் கலந்தது. ஆவியாகி வானுக்கும் சென்றது. யாதும் காமமாகி நின்றது.
    

Comments

Popular posts from this blog

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ