Skip to main content

Posts

Showing posts from March, 2017

பார்த்தசாரதி நகர உலா

பார்த்தசாரதிக்கு தீடிரென சென்னை நகரை உலா வர வேண்டுமென ஆசை வந்துவிட்டது. மீசையை நீவிக்கொண்டே கற்ப்பகிரகத்தை விட்டு வெளியேறினார். நிலவொளியில் கோயில் பிரகாரம் ஜொலித்தது. மூடியிருந்த கதவின் இடைவெளியில் புகுந்து அர்த்த மண்டபத்தில் வந்து நின்றார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இடப்பக்கமாக திரும்பி தெப்பக்குளத்தின் வழியாக நகருக்குள் பிரவெசிக்க நகர்ந்தார். தெப்பகுளத்தை ஒட்டியிருந்த கக்குஸ் வாடையில் திக்குமுக்காடினார். மூக்கை பிடித்துக்கொண்டு வேகமாக கடக்கும் போது ஒரு கான்ஸ்டபில் அவரை லத்தி முனையில் நிறுத்தினார்.   யார் நீ? சந்தேகமாக அவரை கேட்டார் கான்ஸ். திருவல்லிக்கேனி பார்த்தசாரதி என்றார் பார்த்தசாரதி. எங்க போய்டு வற்ற? ம்.. அதட்டினார். கோயில்லே இருந்து வற்றேன். இன்னாரத்துல கோயில்லேன்ன வேலை? திருடிட்டு வற்றயா? கான்ஸ் கோபமாய் பார்த்தசாரதியை கேட்டார். இல்லை கோயில்ல நின்னிருந்த.. மேலும், கீழுமாய் கான்ஸ் பார்த்தார். நிச்சயாமாய் இது கேஸ்தான் என மனதுக்குள் நினைத்துக்கொண்டார். பார்த்தசாரதியோ, என்னடா இது? குளக்கறையைத் தாண்டி போக முடியலையே என வருத்தப்பட்டார். நடை சாத்துனதுக்கி

காஞ்சி சிற்ப்பங்கள் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய  ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் நலமா? சமீபத்தில் நான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும்  முதன்முறையாக செல்லும் வாய்ப்புக் கிட்டியது. நீங்கள் எப்போதும் சொல்லுகின்ற, இந்து மதத்தின் மூன்றடுக்குக்குள் என்னை பொருத்த தெரியாது அலைகின்ற ஒருவன். எனக்குள் நேர்ந்த சில அனுபவங்களை உங்களிடத்தில் பகிற விரும்புகிறேன். வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் நுழைந்ததும், உங்கள் நினைவு தான் வந்தது. சிற்பங்கள் பார்க்க ஒரு முக்கியமான இடம் என்று ஈரோடு சந்திப்பில் சொல்லியிருந்தீர்கள். வேகமாக ஐந்து ரூபாய் கொடுத்து மண்டபத்திற்க்குள் சென்றேன். நானும் நூறு ரூபாய் கொடுத்து தெரிந்தே ஏமாந்தேன். பிறகு நானாக ஒவ்வொரு தூணையும் பார்க்க தொடங்கினேன். எனக்கு சிலைகளைப் பற்றிய அறிவு எதுவும் இல்லை. ஒரு பாமரனாக அந்த சிலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக நீங்கள் சொன்ன பெண(கள்) சிலை இன்னும் என் கண்களுக்குள் நிற்க்கிறது. ஒருவேளை என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். முகம் உடைந்த சிலைகள் வருத்தம் தருவதாய் இருந்தது. இரண்டாம் நாள் ஈரோடு சந்திப்பில், காலையிலேயே சி

ஈஸா வாஸ்ய உபநிஷத் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்கும் , மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம் . நலம் என எண்ணுகிறேன் . அடுத்தடுத்த இரண்டு சந்திப்புகளுக்கான வாய்ப்புகள் கிட்டியும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை வருத்தம் அளிக்கிறது . இந்தக் கடிதம் எழுதத் தூண்டிய புத்தகம் , ஈஸா வாஸ்ய உபநிஷத் – ஓர் அனுபவம் . அதன் முதல் மந்திரத்தை மட்டும் படித்திருந்தேன் . அதனோடு பொருத்திப் பார்க்க்கூடிய ஓர் அழகான படிமம் இன்று கிட்டியது . நான் ஐசி என்ஜின் வகுப்பில் இருந்தேன் . அப்போது பேராசிரியர் என்ஜினில் எப்படி எரிபொருள் தீப் பற்றி எறிகிறது என்று விளக்கிக்கொண்டிருந்தார் . முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலை உண்டாகும் . அது பிஸ்டனுக்கும் , சிலின்டர் கெட்டிற்க்கும் இடையில் அடைபட்டிருக்கும் எறிபொருளை பற்ற வைக்கும் . பின்பு அந்த எரிபொருள் சூடாகி வெடிப்பதால் ,   அது பிஸ்டனை கீழ் நோக்கித் தள்ளி நமக்குச் சக்தி கொடுக்கிறது . பெட்ரோல் என்ஜின் என்றால் முதலில் ஸ்ப்பார்க் பிளக்கில் தீ சுவாலையை உருவாக்கி , அது நகர்ந்து முன்நோக்கி வரும் . தீ சுவாலை முன்னால் நகரும் போது அதற்க்குப் பின்னால் உள்ளதேல்லாம் எற