Skip to main content

காஞ்சி சிற்ப்பங்கள் - எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

அன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய  ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் நலமா?

சமீபத்தில் நான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும்  முதன்முறையாக செல்லும் வாய்ப்புக் கிட்டியது. நீங்கள் எப்போதும் சொல்லுகின்ற, இந்து மதத்தின் மூன்றடுக்குக்குள் என்னை பொருத்த தெரியாது அலைகின்ற ஒருவன். எனக்குள் நேர்ந்த சில அனுபவங்களை உங்களிடத்தில் பகிற விரும்புகிறேன்.

வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் நுழைந்ததும், உங்கள் நினைவு தான் வந்தது. சிற்பங்கள் பார்க்க ஒரு முக்கியமான இடம் என்று ஈரோடு சந்திப்பில் சொல்லியிருந்தீர்கள். வேகமாக ஐந்து ரூபாய் கொடுத்து மண்டபத்திற்க்குள் சென்றேன். நானும் நூறு ரூபாய் கொடுத்து தெரிந்தே ஏமாந்தேன். பிறகு நானாக ஒவ்வொரு தூணையும் பார்க்க தொடங்கினேன். எனக்கு சிலைகளைப் பற்றிய அறிவு எதுவும் இல்லை. ஒரு பாமரனாக அந்த சிலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக நீங்கள் சொன்ன பெண(கள்) சிலை இன்னும் என் கண்களுக்குள் நிற்க்கிறது. ஒருவேளை என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். முகம் உடைந்த சிலைகள் வருத்தம் தருவதாய் இருந்தது. இரண்டாம் நாள் ஈரோடு சந்திப்பில், காலையிலேயே சிலைகள் பற்றியும் அது அழிவது பற்றியும் பேசினீர்கள். எதுக்கு இவரு காலையிலேயே இதைப் போய் பேசகிறார் என்று அப்போது தோன்றிற்று. உண்மையில் அதன் முக்கியத்துவம் இன்று தான் விளங்கியது. இரண்டாவது முறை சுற்றி வரும்போதுதான் தெரிந்தது முதல் முறை சுற்றும் போது எத்தனை சிலைகள் பார்க்காமலே விட்டுவிட்டேனேன்று. பலவித நடனங்கள், குதிரைகள், கடவுள்கள். குறிப்பாக குதிரையில் அமர்ந்து இருக்கும் ஒருவரின் சிலையை பல்வேறு கோவில்களில் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் மாடம்பாக்கம் புராதான சிவன் கோவிலிலூம் அதை கண்டு இருக்கிறேன். அது கட்டப்பட்டது கிபி 9 நூற்றாண்டுவாக்கில். அதே போல் கோர முகமும். இராமானுஜர் சிலை இருப்பதால் அந்த மண்டபம் அமைத்தது கிபி 12 நூற்றாண்டாக இருக்குமா? (அவர் வாழ்ந்த காலம் 12 நூற்றாண்டு என நினைக்கிறேன்). அதனைப் பற்றி கொஞ்சம் விளக்கினால் மகிழ்ச்சி. வேறு உலகத்தில் இருந்தது போல தோன்றிற்று, சிலைகளை பார்த்துவிட்டு வெளிவரும்போது. கலைகளின் உச்சம். மனம் மகிழ்ந்தது. கோவிலுக்குள் சென்றேன்.

சிகிலடைந்த ஓவியங்கள், அற்புதமான சிலைகள் எங்கும் நிறைந்து கிடந்தது. வரதராஜரை சேவிக்க படியேறி உள்ளே நுழைந்தேன். கருநிற மேனியன் நின்றிருந்தான். கலைகள் தந்த மலைப்பில் அவனைப் பார்த்தேன். நன்னா வேண்டிக்க என்றாள் அம்மா. கண்களை மூடி, வேண்டுவது என்வென்று தெரியாமல் விழித்தேன். உச்சகட்ட கலைகளின் நடுவே சூன்யமானவர், அற்ப்பத்தனமாய் வீடு வேண்டும், கார் வேண்டுமேன வேண்டுவோரைப் பார்த்து சிரிப்பதாய் இருந்தது அது. இந்த சூன்ய புன்னகையிலிருந்துதான் அற்புதமான கலைகள் தோன்றியிருக்குமோ என நினைக்க வைத்தது. எறிகின்ற சுடரின் நடுவே சூன்யமான கடவுள், அதைச் சுற்றி நெருப்பு. மையத்தை விட்டு விலக விலக அதன் சுடர் அடர்த்தி குறைந்து, இறுதியில் மறைகிறது. அதைப் போலத்தான் பெருமாளும் அவரைச் சுற்றி சிலைகளும் பிறகு அடர்த்தி குறைந்த இவ்வுலகும். அல்லது இப்படியும் கொள்ளளாம். அடர்த்தியில்லாத இந்த உலகம், மையத்தை நெருங்க நெருங்க அடர்த்தி கூடி மகிழ்ச்சியுற செய்யும் சிலைகள், மையத்தில் ஆனந்தம் தரும் சூன்யம். மிகப்பெரிய அதிர்ச்சி, ஒன்றுமே இல்லாத சூனியத்திற்க்கா இவ்வளவு கலைகளும் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது?

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ