Skip to main content

திருக்குறள் திறப்பு



அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்
-    அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:71


எதேற்ச்சையாக ஆறாம் வகுப்பு புத்தகத்தில் இந்த குறளை பார்க்க நேர்ந்தது. படித்த உடன் குறள் என்னை உள்ளே இழுக்க ஆரம்பித்துவிட்டது. தாழ்ப்பாள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எங்கள் வீட்டின் இரும்பு தாழ்தான் நினைவுக்குவந்தது. வேண்டுமென்றால் போட்டுக்கொள்ளலாம் இல்லை என்றால் விடுவித்துவிடலாம். அடைக்குந்தாழ் என்ற சொல்லாடல் வேண்டுமென்றே அடைத்துக்கொண்ட ஒருவரைப் பற்றிச் சொல்கிறது போலும்.

பொதுவாக பெற்றோருடன் சண்டை வந்தால், சிறுவர்கள் அவர்களுக்கு தோன்றும் எதாவது ஒன்றைச் செய்து எதிர்ப்பு காட்டுவார்கள். சாப்பிடமாண்டேன் என அடம்பிடிப்பது, தரையில் படுத்து உருள்வது உட்ப்பட.  அன்று எனக்கும் என் பாட்டிக்கும் சண்டையேன நினைக்கிறேன். கோபத்தை எப்படி காண்பிப்பது என்று தெரியாமல் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்தி தாழிட்டுப் படுத்துக்கொண்டேன், சிறிது நேரம் கழித்து திறந்தால் போகிறது என்றேண்ணிக்கொண்டேன். விளையாண்ட களைப்பு அசந்து தூங்கிக்போயிருக்கிறேன். பாட்டி முதலில் கெஞ்சிப் பார்த்திருக்கிறாள் பிறகு மிரட்டிப் பார்த்திருக்கிறாள். குச்சி வைத்து கதவை அடித்திருக்கிறாள். அது அடைக்கும் தாழகவே இருந்திருக்கிறது. பெரியம்மாவும் சேர்ந்து முயன்றிருக்கிறாள் ஆகவே இல்லை. என்னுடைய பாட்டியும் நானும் அந்த அறையில் தான் உறங்குவோம். அந்த நாட்களில் வேறு அறை கிடையாது. தவிர அவள் கட்டில் மற்றும் போர்வை உள்ளே இருக்கிறது. கண்டிப்பாக நான் திறந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தும், திறக்கவே இல்லை. சற்று நேரம் கழித்து அப்பா வந்து எழுப்பி பார்த்திருக்கிறார். ம்கூம்..எழவே இல்லை. அவருக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது.  தூங்குவது போல நடிக்கிறான் என்று எண்ணிக்கொண்டார் போலும். அதனால் கதவை வேகமாக உதைத்து, கைகளால் தட்டியும் பார்த்திருக்கிறார். கதவு திறப்பதற்க்கான அறிகுறியே இல்லை. ஒருவேளை நான் தூக்கம் கலைந்து எழுந்திருந்தால், என் நிலை மிக மோசமாக இருந்திருக்கலாம் என்று மறுநாள் காலை பெரியாம்மா சொல்லித்தான் தெரியும். காரணம் அவர் கோபம் அப்படி. நடுநிசி நேரம் இருக்குமேன நினைக்கிறேன், என் அம்மா கல்யாணத்திற்க்கு போய்விட்டு வந்து, என்னை அழைத்தாள். அவள் அழைப்பது சற்று வித்தியசமானது. மகேந்துப்பையா.. எங்கே தூக்கம் போனது என்று தெரியவில்லை. எழுந்து தாழ்ப்பாளைத் திறந்துகொண்டு அம்மாவிடம் ஓடினேன். மறுநாள் காலை எவ்வளவு சொன்னாலும் யாரும் நம்புவதாய் இல்லை. அதேப்படி கதவ தட்டி, உதச்சு, சத்தப் போட்ட கேக்கல, உங்க அம்மா வந்து கூப்பிட்ட உடன் கேக்குது? என்றுதான் கேட்டார்கள். அதற்க்கு இதுதான் பதில் போலும். அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும்தாழ்.  

இதே குறள் வேறோரு இடத்திலும் பொருந்துவதாய் தோன்றுகிறது. கோபம் கொண்ட மனைவி, தன் கணவனிடம் பேசாமல் இருக்கிறாள். அந்த வேளையில் அன்பானவருக்கு வரும் துன்பத்தை அவளாள் தாங்கிக்கொள்ள முடியாதவளாய், அழுது பிறகு பேசியேவிடுவாள். ஊடலிலிருந்து, கூடலுக்கு போகும் மையப்புள்ளியை சுட்டுகிறது இந்த குறள். போபத்திலிருந்து பாசத்திற்க்கு மாறப்போகும் ஒரு கண நேரம் இந்தக் குறள். எந்த நாள், எந்த நேரம், எந்த புள்ளியில் குழந்தை வாலிபனாது, வாலிபன் கிழவானான் என்று சொல்ல முடியாதோ. அதைப் போன்ற ஒரு புள்ளியைப் பற்றி சொல்கிறது இந்தக் குறள். அவள் ஊடலில்தான் இருந்தால், அது எப்படி கரைந்து மாறுகிறது என்பதைச் சொல்கிறது. அவன் மீது கொண்ட அன்பும், கதவின் அடைக்கும்தாழும்  எதிர் எதிர் திசையில் ஒன்றுக்கொன்று போரடுகிறது. அன்பாவனின் துன்பம் ஒரு வினையூக்கி போல, நேம்புகொல் போல. அது அன்பை அடைக்கும்தாழிலிருந்து விடுவிக்கிறது. அன்பு எங்கும் பரவுகிறது.
போர் களத்தில் எதிரி நாட்டு மன்னனைப் பார்த்து பேசும் வசனம் போல் இருக்கிறது, அன்பிற்க்கும் உண்டோ

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா. பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன். கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது. சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன். இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? எ