அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர்
பூசல் தரும்
- அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:71
எதேற்ச்சையாக
ஆறாம் வகுப்பு புத்தகத்தில் இந்த குறளை பார்க்க நேர்ந்தது. படித்த உடன் குறள்
என்னை உள்ளே இழுக்க ஆரம்பித்துவிட்டது. தாழ்ப்பாள் என்ற வார்த்தையைக்
கேட்டவுடன் எங்கள் வீட்டின் இரும்பு தாழ்தான் நினைவுக்குவந்தது. வேண்டுமென்றால் போட்டுக்கொள்ளலாம் இல்லை என்றால் விடுவித்துவிடலாம்.
அடைக்குந்தாழ் என்ற சொல்லாடல் வேண்டுமென்றே அடைத்துக்கொண்ட ஒருவரைப்
பற்றிச் சொல்கிறது போலும்.
பொதுவாக
பெற்றோருடன் சண்டை வந்தால்,
சிறுவர்கள் அவர்களுக்கு தோன்றும் எதாவது ஒன்றைச் செய்து எதிர்ப்பு காட்டுவார்கள்.
சாப்பிடமாண்டேன் என அடம்பிடிப்பது, தரையில் படுத்து
உருள்வது உட்ப்பட. அன்று
எனக்கும் என் பாட்டிக்கும் சண்டையேன நினைக்கிறேன். கோபத்தை எப்படி
காண்பிப்பது என்று தெரியாமல் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்தி தாழிட்டுப் படுத்துக்கொண்டேன்,
சிறிது நேரம் கழித்து திறந்தால் போகிறது என்றேண்ணிக்கொண்டேன்.
விளையாண்ட களைப்பு அசந்து தூங்கிக்போயிருக்கிறேன். பாட்டி முதலில் கெஞ்சிப் பார்த்திருக்கிறாள் பிறகு மிரட்டிப் பார்த்திருக்கிறாள்.
குச்சி வைத்து கதவை அடித்திருக்கிறாள். அது அடைக்கும்
தாழகவே இருந்திருக்கிறது. பெரியம்மாவும் சேர்ந்து முயன்றிருக்கிறாள்
ஆகவே இல்லை. என்னுடைய பாட்டியும் நானும் அந்த அறையில் தான் உறங்குவோம்.
அந்த நாட்களில் வேறு அறை கிடையாது. தவிர அவள் கட்டில்
மற்றும் போர்வை உள்ளே இருக்கிறது. கண்டிப்பாக நான் திறந்தே ஆகவேண்டிய
கட்டாயம் இருந்தும், திறக்கவே இல்லை. சற்று
நேரம் கழித்து அப்பா வந்து எழுப்பி பார்த்திருக்கிறார். ம்கூம்..எழவே இல்லை. அவருக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது. தூங்குவது போல நடிக்கிறான் என்று
எண்ணிக்கொண்டார் போலும். அதனால் கதவை வேகமாக உதைத்து,
கைகளால் தட்டியும் பார்த்திருக்கிறார். கதவு திறப்பதற்க்கான
அறிகுறியே இல்லை. ஒருவேளை நான் தூக்கம் கலைந்து எழுந்திருந்தால்,
என் நிலை மிக மோசமாக இருந்திருக்கலாம் என்று மறுநாள் காலை பெரியாம்மா
சொல்லித்தான் தெரியும். காரணம் அவர் கோபம் அப்படி. நடுநிசி நேரம் இருக்குமேன நினைக்கிறேன், என் அம்மா கல்யாணத்திற்க்கு
போய்விட்டு வந்து, என்னை அழைத்தாள். அவள்
அழைப்பது சற்று வித்தியசமானது. மகேந்துப்பையா.. எங்கே தூக்கம் போனது என்று தெரியவில்லை. எழுந்து தாழ்ப்பாளைத்
திறந்துகொண்டு அம்மாவிடம் ஓடினேன். மறுநாள் காலை எவ்வளவு சொன்னாலும்
யாரும் நம்புவதாய் இல்லை. அதேப்படி கதவ தட்டி, உதச்சு, சத்தப் போட்ட கேக்கல, உங்க
அம்மா வந்து கூப்பிட்ட உடன் கேக்குது? என்றுதான் கேட்டார்கள்.
அதற்க்கு இதுதான் பதில் போலும். அன்பிற்க்கும்
உண்டோ அடைக்கும்தாழ்.
இதே
குறள் வேறோரு இடத்திலும் பொருந்துவதாய் தோன்றுகிறது. கோபம் கொண்ட மனைவி, தன் கணவனிடம் பேசாமல் இருக்கிறாள். அந்த வேளையில் அன்பானவருக்கு
வரும் துன்பத்தை அவளாள் தாங்கிக்கொள்ள முடியாதவளாய், அழுது பிறகு
பேசியேவிடுவாள். ஊடலிலிருந்து, கூடலுக்கு
போகும் மையப்புள்ளியை சுட்டுகிறது இந்த குறள். போபத்திலிருந்து
பாசத்திற்க்கு மாறப்போகும் ஒரு கண நேரம் இந்தக் குறள். எந்த நாள்,
எந்த நேரம், எந்த புள்ளியில் குழந்தை வாலிபனாது,
வாலிபன் கிழவானான் என்று சொல்ல முடியாதோ. அதைப்
போன்ற ஒரு புள்ளியைப் பற்றி சொல்கிறது இந்தக் குறள். அவள் ஊடலில்தான்
இருந்தால், அது எப்படி கரைந்து மாறுகிறது என்பதைச் சொல்கிறது.
அவன் மீது கொண்ட அன்பும், கதவின் அடைக்கும்தாழும் எதிர் எதிர் திசையில் ஒன்றுக்கொன்று
போரடுகிறது. அன்பாவனின் துன்பம் ஒரு வினையூக்கி போல, நேம்புகொல் போல. அது அன்பை அடைக்கும்தாழிலிருந்து விடுவிக்கிறது.
அன்பு எங்கும் பரவுகிறது.
போர் களத்தில்
எதிரி நாட்டு மன்னனைப் பார்த்து பேசும் வசனம் போல் இருக்கிறது, அன்பிற்க்கும் உண்டோ
Comments
Post a Comment